உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

யாப்பருங்கலம்

“ஒல்லாத பிறப்புணர்த்தும் ஒளிவட்டம் புடைசூழ எல்லார்க்கும் எதிர்முகமாய் இன்பஞ்சேர் திருமுகமோ ஏர் மலர மணிப்பொய்கை எழிலாம்பற் பொதியவிழ

66

66

ஊர்கோளோ டுடன்முளைத்த *ஒளிவட்டம் உடைத்தன்றே?

'கனல்வயிரம் குறடாகக் கனற்பைம்பொன் சூட்டாக இனமணி ஆரமா இயன்றிருள் இரிந்தோட

அந்தரத் துருளுநின் அலர்கதிர் அறவாழி

  • இந்திரர்கள் இனிதேத்த இருவிசும்பிற் றிகழ்ந்தன்றே?

வாடாத மணமாலை வானவர்கள் உள்ளிட்டார்

நீடாது தொழுதேத்த நிற்சேர்ந்த பெருங்கண்ணு முகிழ்பரிதி முகநோக்கி முறுவலித் துண்ணெகிழ்ந்து திகழ்தகைய கோட்டைசூழ் *திருந்துநிழல் திளைத்தன்றே?

இவை தாழிசை.

"மல்லல் வையம் அடிதொழு தேத்த

அல்லல் நீக்கற் கறப்புணை ஆயினை.

“ஒருதுணி வழிய உயிர்க்கரண் ஆகி

இருதுணி ஒருபொருட் கியல்வகை கூறினே. வை நாற்சீர் ஈரடி இரண்டு அம்போ தரங்கம். “ஏடலர் தாமரை ஏந்தும் நின்னடி;

வீடொடு கட்டினை விளக்கும் நின்மொழி; விருப்புறு தமனியம் விளக்கு நின்னிறம்; *ஒருக்குல கூடுற உஞற்றும் நின்புகழ். வை நாற்சீர் ஓரடி நான்கு அம்போதரங்கம்.

  • “இந்திரர்க்கும் இந்திரன் நீ;

இணையில்லா இருக்கையை நீ;

மந்திர மொழியினை நீ;

மாதவர்க்கு முதல்வனும் நீ;

அருமைசால் அறத்தினை நீ;

ஆருயிரும் அளித்தனை நீ; பெருமைசால் குணத்தினை நீ;

329

பிறர்க்கறியாத் திறத்தினை நீ.

(பா. வே) *ஒளிவட்டத் தமர்ந்தன்றே. *இந்திரனும் பணிந்தேத்த. *திருநதிகள். *ஒருத்தல் *இந்திரற்கும்