உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

377

நாற்சீர் நாலடியால் வருவன கலி நிலை விருத்தம் என்றும் வழங்கப்படும் எனக் கொள்க.

வரலாறு:

(கலி மண்டில விருத்தம்)

“இந்திரர்கள் ஏத்துமடி ஈண்டுயிர்கள் ஓம்புமடி ;

வெந்திறல் ஞாயிற்றெழில் 'வீவிலொளி வெல்லுமடி; மந்திரத்தின் ஓதுமடி மாதுயரம் தீர்க்குமடி ;

அந்தரத்தின் ஆயவிதழ்த் தாமரையி னங்கணடி

இஃது அடி மறியாய் நிற்றலின், கலி மண்டில விருத்தம் என்று வழங்கப்படும் எனக் கொள்க.

(கலி நிலை விருத்தம்)

"விரிகதிர் மதிமுக மடநடை கணவனொ

3

உடரியுறு கொழுநிழல் அசையின் பொழுதினில் எரிதரு தளிர்சினை இதழ்மிசை உறைவோன் தரவிலன் எனின்மனம் உரைமினம் எனவே

இஃது அடி மறி ஆகாதே நின்றவாறே நின்று பொருள் பயத்தலின், கலி நிலை விருத்தம் என்று வழங்கப்படும்.

இவை பதினாலு தளையாற் கூறுபடுத்து நோக்க, இருபத் தெட்டு விருத்தமாம். அவை எல்லாம் வந்தவழிக் கண்டு கொள்க.

'அளவடி நான்கின' என்று பன்மை சொல்லிய அதனால், கலி ஒலி வழுவாது நாற்சீர் நாலடியான் வருவன எல்லாம் தரவு கொச்சகக் கலிப்பா என்று வழங்கப்படும் எனக் கொள்க.

வரலாறு:

“செல்வப்போர்க் கதக்கண்ணன்' (யா. வி. 15. 20. 32. 78. 86) என்பது கலித்தளையான் வந்தது.

"நாற்சீர் நாலடி வருவ தாயின்

ஒலியின் இயைந்த கலிவிருத் தம்மே”

என்றார் அவிநயனார்.

66

"ஐஞ்சீர் நாற்சீர் அடிநான் காயின்

எஞ்சாக் கலியின் துறையும் விருத்தமும்’’

என்றார் மயேச்சுரர்.

1. அழிவில்லாத. 2. நெருக்கமிக்க. 3. தங்கிய.