உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

383

'பட்டினப்பாலை என்னும் வஞ்சி நெடும்பாட்டு, ஆசிரிய அடி விரவி வந்த ஏந்திசைத் தூங்கல் விரவியற் குறளடி வஞ்சிப்பா. விரவியற் சிந்தடி வஞ்சிப்பா வந்தவழிக் கண்டு கொள்க. தளை விகற்பங்களால் வருவனவும் வந்தவழிக் கண்டு

காள்க.

“தன்றளை ”பாதம் தனிச்சொற் சுரிதகம் என்றிவை நான்கும் அடுக்கிய தூங்கிசை வஞ்சி யெனப்பெயர் வைக்கப் படுமே என்றார் காக்கைபாடினியார். “தூங்கல் இசையாய்த் தனிச்சொற் சுரிதகம் தான்பெறும் அடிதளை தழீஇவரை வின்றாய் எஞ்சா வகையது வஞ்சிப் பாவே"

66

என்றார் அவிநயனார்.

66

“தூங்கல் ஓசை நீங்கா தாகி

நாற்சீர் நிரம்பா அடியிரண் டுடைத்தாய் மேற்சீர் ஓதிய ஐஞ்சிர் பெற்றுச்

சுரிதகம் ஆசிரியம் உரியதனின் அடுத்து

வந்த தாயின் வஞ்சிப் பாவே”

என்றார் நீர் மலிந்த வார்சடையோன்

பேராசிரியர்.

பேர் மகிழ்ந்த

(நேரிசை வெண்பா)

“ஈரிரண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச்

6

எனவும்,

சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம்; - ஓரும்

நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக் கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து”

“பன்னிய சீர்பயின்று பத்து நிலத்தவாய்

மன்னவனைச் சேர்ந்து வனப்பெய்தி - மன்னுதலால், நான்காம்பா என்றுரைக்கும் நாமநூல் வஞ்சியை நான்காம் குலமென்றார் நன்கு

எனவும் இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.

1.

“பாடியதோர் வஞ்சிநெடும் பாட்டால் பதினாறு கோடி பொன் கொண்டதுநின் கொற்றமே"

- தமிழ்விடுதூது, 193.

"பட்டினப்பாலை என்னும் வஞ்சி நெடும் பாட்டினுள் "நேரிழை...... கவரும்' என்றித் தொடக்கத்தன ஆசிரிய அடி”. யா. வி. 31.

2.அடி.