388
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
கறைதரு காலை அமுதே! விருத்தம் ; தனிச்சொல்வந்து
மறைதலில் 'வாரத்தி னாலிறும் வஞ்சிவஞ் சிக்கொடியே!”- யா. கா. 34. இக் காரிகையை விரித்து உரைத்துக் கொள்க.
“முச்சீர் நாலடி ஒத்தவை வரினே
வஞ்சி விருத்தம் என்றனர் கொளலே'
என்றார் சிறுகாக்கைபாடினியார்.
“சிந்தடி நான்காய் வருவது வஞ்சிய தெஞ்சா விருத்தம்”
என்று பிறிதொரு வாய்பாட்டாற் சொல்ல வேண்டியது என்னை? எல்லாப் பாவும் தன் சீராலும் தன் தளையாலும் வருவன, 'தலையாகு இன்பா' என்றும்; தன் சீரும் தன் தளையும் பிற பாவின் சீரோடும் தளையோடும் மயங்கி வருவன, 'இடையாகு இன்பா' என்றும் ; தன் சீரும் தன் தளையும் இன்றியே வருவன கடையாகு இன்பா' என்றும் வழங்குவர் ஒருசார் ஆசிரியர் என்பது அறிவித்தற்கு வேண்டப்பட்டது. என்னை?
66
“தன்சீர் நிலையில் தளைதம தழீஇய இன்பா என்பர் இயல்புணர்ந் தோரே' “ஏனையவே விரவின் இடையென் படுமே; தானிடை இல்லது கடையெனப் படுமே”
என்றார் மயேச்சுரர்.
வஞ்சி நிலைத் தாழிசை முதலாக உடையன செய்யுள், சிறப்புடை ஏழு தளையாலும், சிறப்பில் ஏழு தளையாலும், கூறுபடுப்ப, ஒரோ ஒன்று பதினான்கு பாகுபாட்டைச் சொல்லும்; பிற வகையாலும் விகற்பிக்கப் பலவுமாம்.
6
(நேரிசை வெண்பா)
“வஞ்சிப்பா நான்குந்தன் வாலியமூன் றோசையால்
எஞ்சாத ஈராறாம் ; ஈண்டவற்றை - எஞ்சாத
”பந்தம் பதினான்கின் மாறப் பழுதின்றி
வந்தன நூற்றறுபத் தெட்டு”
எனவும்,
66
அந்தத்திற் பாவிற் கினமாய ஆறினையும் பந்தம் பதினான்கி னாற்பரப்ப - வந்தன
1. வாரம் - சுரிதகம். 2. தளை.