406
6
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
து எழுத்துமாறு நிரல் நிறை. இஃது எழுத்தாற் கொள்ளுமாறு: “காவி கண்,' என்றும், 'மதி முகம்' என்றும், ‘துடி மருங்குல்' என்றும், ‘கனி வாய்' என்றும் விடுக்க.
இனி, வினை நிரல் நிறை வருமாறு:
(இன்னிசை வெண்பா)
“அடல்வேல் அமர்நோக்கி நின்முகம் கண்டே உடலும் இரிந்தோடும் ஊழ்மலரும் பார்க்கும் கடலும் கனையிருளும் ஆம்பலும் பாம்பும் தடமதியம் ஆம்என்று தாம்’”
யா.வி. 51. மேற்.
தொல். பொ. 403. மேற்.
எனவும்,
(நேரிசை வெண்பா)
166
காதுசேர் தாழ்குழையாய் கன்னித் துறைச்சேர்ப்ப போதுசேர் தார்மார்ப ! போர்ச்செழிய! -நீதியால் மண்அமிர்தம் மங்கையர்தோள் மாற்றாரை ஏற்றார்க்கு நுண்ணிய வாய பொருள்’
6
எனவும்,
“உண்டூர்ந் துதைத்தழித் தூதிக்காத் தேற்றளந்து
—
நேமிநாதம். 92. மேற்.
கொண்டெடுத்து வாய்போழ்ந்து சென்றாக்கிக்- கண்டறுத்தாள் பேய்முலை புட்சகடம் சோகோடா நீர்நிலம்
பூமலைமா தூதமிர்தம் நஞ்சு
எனவும்,
“இறுத்தொசிச் தட்டுதைத் தேந்திப்போழ்ந் தாடிப் பறித்தெறிந் தூர்ந்தணைந்து காத்தான் - செறுத்த விடைகுருந்தம் மல்லன் உருள்மலைமா கூத்துப் படைவிளவு புட்பாம் பினம்
எனவும்,
(தரவு கொச்சகம்)
2“பேய்முலை வியன்ஞாலம் பூங்குருந்தம் மதவேழம் வாய்மருப் பெழிலேறு வாட்கண்ணார் குரவைச்சீர் உண்டானும் அளந்தானும் ஒசித்தானும் காத்தானும் கொண்டானும் கொடுத்தானும் கொடியுவணத் தானரோ
6 எனவும் இன்ன பிறவும் வந்தவாறு கண்டுகொள்க.
1. மண், கா. அமிர்தம், து(உண்). மங்கையர்தோள், சேர். மாற்றாரை, தாழ், ஏற்றார்க்கு, குழை. நுண்ணியவாயபொருள், ஆய். 2. இஃதிரண்டடி எதுகைச் செய்யுள்.