யாப்பருங்கலம்
415
இதனுள், ‘சுரை’ என்று நின்றது ‘மிதப்ப என்பதனோடு என்று நின்றது
பொருள் கொள்ளவும், அம்மி’
‘ஆழ'
என்பதனோடு பொருள்கொள்ளவும், 'யானைக்கு' என்று நின்றது 'நிலை' என்பதனோடு பொருள் கொள்ளவும். 'முயற்கு' என்று நின்றது ‘நீத்து' என்பதனோடு பொருள் கொள்ளவும் வந்தமை யால், சுண்ணமொழி மாற்று.
“சுண்ணந் தானே,
பட்டாங் கமைந்த ஈரடி எண்சீர்
ஒட்டுவழி அறிந்து துணிந்தனர் இயற்றல்” என்றாராகலின்.
(வு) அடிமறி மொழி மாற்று வருமாறு:
(அடி மறி மண்டில ஆசிரியப்பா)
“சூரல் பம்பிய சிறுகாண் யாறே;
சூரர மகளிர் ஆரணங் கினரே; *வாரலை எனினே யானஞ் சுவலே; சாரல் நாட! நீவர லாறே
எனவும்,
“மாறாக் காதலர் மலைமறந் தனரே; ஆறாக் கட்பனி வரலா னாவே; ஏறா மென்றோள் வளைநெகி ழும்மே; கூறாய் தோழியான் வாழு மாறே
6 எனவும்,
6
"இட்டில் இரும்புழை இருளிய பொழுதே; பட்டி உளியம் கொட்கும் ஆங்கே; பொற்றொடி உண்கண் நீர்நில் லாவே; வெற்ப ! வாரல் வியன்மலை யாறே
―
—
- தொல், எச்ச. 16.
யா. வி. 73. மேற்.
யா. கா. 43. மேற்.
– யா. வி. 73. மேற்.
- நேமிநாதம். 92. மேற்.
எனவும் கொள்க. இவை வேண்டிற்று ஓரடி முதலாகச் சொன்னாலும் பொருள் கொண்டு நிற்றலால், 'அடி மறி மொழி மாற்று.
66
“அடிமறிச் செய்தி அடிநிலை திரிந்து சீர்நிலை திரியாது தடுமா றும்மே
என்பவாகலின்.
—
- தொல். எச்ச. 11.
1. அடி அடியாகப் பெயர்த்துமாற்றினும் ஓசையும் பொருளும் மாறுபடாதது அடிமறிமாற்று அல்லது அடிமறி மொழிமாற்று. *(பா. வே) வாரல்.