யாப்பருங்கலம்
இவை அடியின்றி நடப்பன உரைத்தவாறு.
“செயிர்தீர் செய்யுள் தெரியுங் காலை
அடியின் ஈட்டத் தழகுபட்டியலும்”
66
ஒரோவடி யானும் ஒரோவிடத் தியலும்”
66
அவைதாம்,
455
பாட்டுரை நூலே மந்திரம் பிசியே
முதசொல் அங்கதம் வாழ்த்தொடு பிறவும்
ஆக்கின என்ப அறிந்திசி னோரே'
என்றார் பல்காயனார்.
இவை ஓரடியால் நடப்பன உரைத்தவாறு.
புனைந்துரை இரு திறத்தன: பெரியதனைச் சுருக்கிச் சொல்லுதலும் சிறியதனைப் பெருக்கிச் சொல்லுதலும் என. என்னை?
“உரைக்கப் படும்பொருட் கொத்தன எல்லாம் புகழ்ச்சியின் மிக்க புனைந்துரை ஆகும்”
என்றாராகலின்.
வரலாறு:
(நேரிசை வெண்பா)
“அடையார்பூங் கோதையாட் கல்குலும் தோன்றும் புடையார் வனமுலையும் தோன்றும் - இடையாதும் கண்டுகொளா தாயினும் காரிகை நீர்மையாட் குண்டாகல் வேண்டும் நுசுப்பு"
எனவும்,
(குறள் வெண்பா)
“அயிர்ப்பாகல் நோக்குவேன் கண்டேன் *மயிர்ப்பாகிற் பாகத்திற் பாகம் நுசுப்பு
99
எனவும் இவை பெரியதனைச் சுருக்கின. *“கலைக்கணார் நின்றிட்ட பூசல் கடைக்கணார் கேளாமை நீண்டன கண்
எனவும்,
""
(பா. வே) *மயிர்ப்பாதி. *கடைக்கணார்.