456
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
“பொன்மலி கூடல் பூமலி கச்சி
மாரி ஈகை மணியணி மாடம்
எனவும் இன்னவை எல்லாம் சிறியவற்றைப் பெருக்கின. பிறவும் அன்ன.
இன்னும், 'வண்ணமும் பிறவும்' என்றதனாலே, நாலசைச் சீர் இன்றியே நடாத்துமாறும், நான்கசையும் எண்பத்திரண்டு சீரும் கொண்டு இயற்றுமாறும், எழுபது தளை வழுவிற்றீர்ந்த அறுநூற்று இருபத்தைந்து அடியும் ஆமாறும், சந்தமும் தாண்டகமும் ஆமாறும், பாக்கட்கு வருணம் முதலாயினவற்றை வகுத்து வழங்குமாறும் உரைத்துக் கொள்க.
அவை சொல்லுமாறு:
(நேரிசை வெண்பா)
“குற்றுகரம் ஒற்றாக்கிக் கூன்வகுத்துச் சிந்தியற்றி மற்று நெடிலும் வகையுளியும் - சொற்றபின் மேலசைச்சீர் நாட்டி அளபெடை வீறழித்தால் நாலசைச்சீர்க் கில்லை நடை
என்பது, ஏழ் நயமும் *தொகுத்தவாறு.
(கலி விருத்தம்)
“காக்கை பாடினி யார்முதலாகிய மாக்க விப்புல வோர்மதம் பற்றியீங் கூக்கம் இன்மையுண் டாமுக ரத்தையொற் றாக்கின் நாலசைச் சீரணை யாதரோ”
இதன் கருத்து:
6
766
"குண்டுநீடுநீர்க் குவளைத்தண்சுனை
எனவும்,
6
2“குறித்துக்கூடுவோர் நெறிமயங்கவும்”
எனவும்,
3 66
"போதுசேர்ந்துகூடு பொறிவண்டினம்'
எனவும்,
1-4 மேலே வரும் ‘நலஞ்செலத் தொலைந்த’ என்னும் பாட்டிலுள்ள அடிகள்.
―
குண் டு - நீ - டு நீ - டு - நீர்.
1.
2.
குறித் - துக்
கூ
―
டு
—
வோர்.
3.
போ
—
து – சேர்ந் – து. கூ- டு.
(பா. வே) *தொடுத்தவாறு.