யாப்பருங்கலம்
491
(குறள் வெண்பா)
66
“கழிந்தமூன் றேழாதி மூவைந் துயர
மொழிந்தனர் மூவொன்ப தென்று'
என்பவாகலின்.
ஈரெழுத்தாய வழி, நான்கு சீரானும் ஆக்கப்பட்ட வெண்பாவிற்கு அடித்தொகை முப்பத்தாறு.
என்னை?
(குறள் வெண்பா)
“ஈரெழுத்து நாற்சீரா வெள்ளைக் கடித்தொகை கூறுவர் முப்பத்தா றென்று”
என்பவாகலின்.
வெள்ளைக்கு மூவெழுத்துச் சீராவன, பாதிரியும், மாசெல்வாயும், மாபடுவாயும், புளிமாவும், போதுபூவும், போரேறும், பூமருதும். விறகு தீயும், கடியாறும் என ஒன்பது சீரும் எனக் கொள்க.
என்னை?
(நேரிசை வெண்பா)
“பாதிரியும் மாசெல்வாய் மாபடுவாய் இன்புளிமாப்
போதுபூப் போரேறு பூமருது - தீதில்
விறகுதீ வீழ்கடியா றொன்பதாம் என்றாங்
கறைகுவர் மூவெழுத்துச் சீர்”
என்பவாகலின்.
அவற்றுள், விறகுதீயும், கடியாறும் என்றிரண்டு சீரும் ழெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்தடிகாறும் உயர்ந்த பத்தடியும் ஒரோ ஒன்றிற்குப் பத்துப் பத்தாக, இரண்டிற்குமாக இருபது அடியாம்.
என்னை?
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
"தாவில் விறகுதீத் தண்கடியா றென்றிரண்டும் ஏழுமுத லாகப் பதினா றுயர்த்தெண்ண ஆகும் அடியிருப தாம்”
என்பவகாலின்.
ஒழிந்த பாதிரியும், மாசெல்வாயும், மாபடுவாயும், புளிமாவும், போதுபூவும், பூமருதும், போரேறும் என ஏழு சீரும் எட்டெழுத்தடி முதலாகப் பதினாறெழுத்து அடிகாறும்