494
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
வண்பாவிற்குச் சீரால் ஆம் அடித்தொகை நூற்றுத்
தொண்ணூற்றாறு.
என்னை?
(குறள் வெண்பா)
"தோற்றுங்கால் சீராலாம் வெள்ளைக்கடித்தொகை
நூற்றுத்தொண் ணூற்றின்மேல் ஆறு
என்பவாகலின்.
இனி, வெண்பாவினுள் அசை சீராய் நடக்குமாறு: வண்பாவினுள் நாலசையும் சீராமிடத்து மூன்று நிலைமை யவாம் ; ஓர் எழுத்தினாற் சீராகலும், இரண்டெழுத்தினாற் சீராகலும், மூன்று எழுத்தினாற் சீராகலும் என.
என்னை?
(குறள் வெண்பா)
'வெள்ளையுள் நாலசையும் சீராங்கால் முந்நிலைமை கொள்ளுமாம் ஒன்றாதி மூன்று”
6 எனவும்,
"ஓரெழுத் தாதியா மூன்றெழுத் தீறாக
மூன்று நிலைமைப் படும்
எனவும், சொன்னாராகலின்.
அவை வருமாறு: நேர் அசையும் நேர்பு அசையும் ஓர் எழுத்தினாற் சீராகுமிடத்து ஏழெழுத்தடி முதலாகப் பதினைந்து எழுத்தடி காறும் உயர, ஒரோ ஒன்றிற்கு ஒன்பதாக, இரண்டிற்கு மாய்ப் பதினெட்டாம்.
என்னை?
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
“நேர்நேர் பசையிரண்டும் ஓரெழுத்துச் சீராங்கால் ஏழு முதலாப் பதினைந் துயர்த்தெண்ண. ஆகுமீ ரொன்ப தடி
என்பவாகலின்.
99
அவ்விரண்டினையும் 'தேமா' என்னும் சீராகக் கொள்ள,
அலகு நிலையால் ஒன்பதாம்.
என்னை?