498
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
நீடு கொடியோடு மாசெல்வாய் மாபடுவாய்
மூதறிவார் மூவோ ரெழுத்தின் முடிந்தனவென் றோதினார் ஒன்பது சீர்
என்பவாகலின்.
அவற்றுள் 'கடியாறு, மாசெல்வாய், மாபடுவாய் என்னும் இம் மூன்றும் பதின்மூன்று எழுத்தடி முதலாகப் பதினெட்டு எழுத்தடிகாறும் உயர்ந்த ஆறடியும் பெற, மூன்றுமாய்ப் பதினெட்டடியாம்.
66
என்னை?
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஒத்த கடியாறு மாசெல்வாய் மாபடுவாய் பத்தின்மேல் மூன்றாதி பத்தின்மேல் எட்டுயர ஒத்த அடிபதி னெட்டு”
என்பவாகலின்.
இனி, ஒழிந்த ஆறுமாவன: ‘பாதிரி, போதுபூ, விறகுதீ, போரேறு, பூமருது, நீடுகொடி' என்னும் இவ்வாறும் பதினான்கெழுத்தடி முதலாகப் பதினெட்டு எழுத்தடிகாறும் உயர்ந்த ஐந்தடியும் பெற்று, ஒரோ ஒன்று ஐந்தடியாக, ஆறுமாய் முப்பது அடியாம்.
என்னை?
66
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
ஏனை அறுசீரும் ஈரேழ் முதலாக
நானான்கின் மேலிரண் டோங்கி ஒரோவொன்றற் கைந்தா அடிமுப்ப தாம்
என்பவாகலின்.
இவை முப்பதும் மேற்கூறிய பதினெட்டுமாய் மூவெழுத் தாய வழிக் கலியடித்தொகை நாற்பத்தெட்டு.
என்னை?
(குறள் வெண்பா)
66
"மூவெழுத் தாங்கால் முரற்கைக் கடித்தொகைமேல் ஏவினார் நாற்பதின்மேல் எட்டு'
என்பவாகலின்.
நாலெழுத்துச் சீராய்க் கலியுள் நடப்பன. கணவிரி, கடியாறு, விறகுதீ, பூமருது, நீடுகொடி, புலிசெல்வாய், மாபடுவாய், மழகளிறு, குழறு புலி' என்னும் ஒன்பது சீரும் எனக் கொள்க.