உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/536

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பருங்கலம்

“ஈரிரண்டோ டீரா றெழுவாய் இறுவாயாச் சேரும் எழுத்திருசீர் வஞ்சிக்காம்; - ஓரும் நெடிலடிக்கு நேர்ந்தனவும் மூவொருசீர் வஞ்சிக் கடிவகுத்தார் எட்டாதி ஆய்ந்து

99

(குறள் வெண்பா)

“ஐந்தாதி ஐயிரண் டீறாம் அறுநிலமும்

வந்தவடி வெள்ளைக் களவு

(நேரிசை வெண்பா)

“பண்பாய்ந்த ஏழு பதினா றிழிபுயர்வா

519

- யா. வி. 25. மேற்.

வெண்பா அடிக்கெழுத்து வேண்டினார் - வெண்பாவின்

ஈற்றடிக் கைந்தாதி ஈரைந் தெழுத்தளவும்

பாற்படுத்தார் நூலோர் பயின்று'

இவற்றின் கருத்து: ‘நாலெழுத்து முதலாகிய மூன்றும் குறளடி : ஏழெழுத்து முதலாகிய மூன்றும் சிந்தடி; பத்தெழுத்து முதலாகிய ஐந்தும் அளவடி; பதினைந் தெழுத்து முதலாகிய மூன்றும் நெடிலடி; பதினெட் டெழுத்து முதலாகிய மூன்றும் கழிநெடிலடி.

66

‘அவற்றுள் 'ஐந்தடியாலும் ஆசிரியம் வரப்பெறும்.

சிந்தடியாலும், அளவடியாலும், நெடிலடியின் முதல் இரண்டடியாலும் வெண்பா வரப்பெறும். வெண்பாவின் ஈற்றடி ஐந்தெழுத்து முதலாகப் பத்தெழுத்தின்காறும் உயர்ந்த ஆறு நிலத்தானும் வரப்பெறும்.

பதின்மூன்றெழுத்து முதலாக இருபதெழுத்தின்காறும் உயர்ந்த எட்டு நிலத்தானும் இலக்கணக் கலிப்பா கலிப்பா வரப் பெறும். இலக்கணக் கலிப்பா அல்லாதன, மிக்கும் குறைந்தும் வரப்பெறும்.

இருசீரடி வஞ்சிப்பா நான்கெழுத்து முதலாகப் பன்னீரெழுத்தின்காறும் உயர்ந்த ஒன்பது நிலத்தானும் வரப் பெறும். முச்சீரடி வஞ்சிக்கு எழுத்து எண்ணி வகுத்திலரேனும், ஏழெழுத்து முதலாகப் பதினேழெழுத்தின்காறும் உயர்ந்த பத்தடியாலும் வரப்பெறும். முச்சீரடி யெல்லாம் ஒரு நிலமாகக் கொண்டு, இரு சீரடி வஞ்சி நிலம் ஒன்பதோடும் கூட்டி, வஞ்சிநிலம் பத்து என்ப.

1. குறள், சிந்து, அளவு, நெடில், கழிநெடில்.