உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/538

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெடிலடி

15-17

யாப்பருங்கலம்

இறும்பமர் மலரிடை யெழுந்த மாவின் நறுந்தழை துயல்வரூஉம் செறிந்தேந் தல்குல்

  • அணிநடை அசைஇய அரியமை சிலம்பின் மணிமருள் வணர்குழல் வளரிளம் பிறைநுதல் ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளொடு

கழிநெடிலடி

18-20

நளிமுழவ முழங்கிய அணிநிலவு நெடுநகர் இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடை கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை என்பவஃ தொருநீ மறைப்பின் ஒழிகுவ தன்றே"

521

(13) (14)

(15)

(16)

(17)

(18)

(19)

(20)

– யா. வி. பக். 427 மேற்

யா. கா. 43. மேற்.

என்னும் ஆ சிரியம், நான்கெழுத்து முதலாக இருபது எழுத்தின்காறும் உயர்ந்த பதினேழ் நிலமும் பெற்று, குறளடி முதலாகிய ஐந்தடியாலும் வந்தது.

166

இவ்வெழுத்துக்களால் வெண்பா வருமாறு:

(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)

மட்டுத்தான் உண்டு மதஞ்சேர்த்து விட்டுக்

(7)

களியானை கொண்டுவா என்றான் - களியானைக் கியாரோ எதிர்நிற் பவர்!”

இஃது ஏழெழுத்தடி வெண்பா.

66

ஆர்த்தார்த்துக் கண்சேந்து வேர்த்து விரைந்துதன்

பொன்னோடை யானையின் மேற்கொண்டான் - என்னாங்கொல் மன்னர் உறையும் மதில்!”

இஃது எட்டெழுத்தடி வெண்பா.

(குறள் வெண்பா)

"சென்று முகந்து நுதலாட்டி மாறேற்று

வென்று பெயர்ந்தானெங் கோ'

இஃது ஒன்பதெழுத்தடி வெண்பா.

வை மூன்றும் சிந்தடி.

1. முதலடிகளையே எழுத்தெண்ணிக் காண்க. (பா. வே) *அணிநலன். அணிநகை.

(8)

(9)