522
து
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
(நேரிசை வெண்பா)
“நின்று திரியும் சுடருளை நில்லாது
வென்று திரிதருவேன் யானுளனாச் - சென்றோங்கி மண்ணக மார்பின் மறையலோ மற்றினியென்
கண்ணகத்துப் பட்ட படி
""
து பத்தெழுத்தடி வெண்பா.
“இற்றேன் உடம்பின் எழினலம் என்றென்று பற்றுவிட் டேங்கும் உயிர்போல - மற்று நறுமென் கதுப்பினாள் தோடோயின் நண்ணும் *மறுநோக் குடையவாம் கண்”
இது பதினோரெழுத்தடி வெண்பா.
'புறத்தன நீருள பூவுள மாவின்
திறத்தன கொற்சேரி யவ்வே- அறத்தின் மகனை முறைசெய்தான் மாவஞ்சி யாட்டி முகனை முறைசெய்த கண்’
99
-
(10)
(11)
(12)
- தண்டியலங்காரம், 40. மேற்.
இது பன்னிரண்டெழுத்தடி வெண்பா. “இரியன் மகளிர் இலைஞெமலுள் ஈன்ற அரியிளஞ் செங்காற் குழவி* அருகிருந் தூமன்பா ராட்ட உறங்கிற்றே செம்பியன்றன் நாமம்பா ராட்டாதார் நாடு
இது பதின்மூன்றெழுத்தடி வெண்பா. ‘மணிமிடைந்த பைம்பூண் மலரணிதார் மார்பன் அணிமகர வெல்கொடியா னன்னான் - தனிநின்று தன்னை *வணங்காமைத் தானணங்க வல்லாளே *என்னை அணங்குறியி னாள்”
இது பதினான்கெழுத்தடி வெண்பா. இவை ஐந்தும் அளவடி.
(நேரிசை வெண்பா)
“முகமறிந்தார் மூதுணர்ந்தார் முள்ளெயிற்றார் காமம் அகமறையாத் தாம்வாழு மென்றோர்க் - ககமறையா மன்னைநீ வார்குழை வையெயிற்றாய்! என்னோமற் றென்னையும் வாழும் எனல் !
இது பதினைந்தெழுத்தடி வெண்பா.
(13)
முத்தொள்ளாயிரம்
(14)
(15)
(பா. வே) *பிறநோக். *அரையிருளில். *உறங்குமே. *வணங்காமற் றான் வணங்க வல்லானே.
என்னை வணிங்குரியி னான்.