532
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
அதற்கு இலக்கணம்.
(கலி விருத்தம்)
“பெருக்கிய வாறு பிரத்தரித் தாங்கட்
டருக்கிய நாவலர் சந்தத் தரணி இரட்டித் ததனந்தத் தொன்று களைய விரற்கள வாமென்று வேண்டுவர் தாமே
(நேரிசை வெண்பா)
"நாலிருசாண் கொண்டத நற்கோலாம்; ஐந்நூறு
கோலியைந்த நீளம் குரோசமே ;- நாலு குரோசமோர் காவதமாம் ;- குன்றாத சாணும் விரோதந்தீர் முந்நால் விரல்
(குறள் வெண்பா)
"முந்நால் விரற்சாண் இரண்டுகை நான்குகோல்
ஐஞ்ஞூறு கூப்பீ டளவு”
(நேரிசை வெண்பா)
“பரமாணுத் தேர்த்துகள் பஞ்சித்துய் எஞ்சா மயிர்மணல் 'ஐயவி எண்ணெல்-அ விரலளவும்
எட்டெட்டா ஏறும் எழில்விரல் ஆதியா
ஒட்டினவும் நூன்முறையால் ஒட்டு
(குறள் வெண்பா)
“படையொடுதீ நீர்வளியாற் பங்கப் படாத
முடிபொருள் முந்தை அணு
இவற்றை விரித்து உரைத்துக் கொள்க.
(நேரிசை வெண்பா)
“உறழ்ச்சிகே டுத்திட்டம் ஒன்றிரண்டென் றேத்தித் திறப்படுத்த திண்ணிலகுச் செய்கை - சிறப்பித்தாங் கெண்ணி நிலவளவோ டேய்ந்த இருமூன்றே திண்ணியோர் கண்ட தெளிவு
இது சமவிருத்தங்கட்கு ஆறு பிரத்தியமும் சொன்னவாறு.
ல
இனி, ஒருசார் ஆசிரியர், உறழ்ச்சி நில அளவுகளை
விகற்பித்துச் சொல்லுமாறு.
1. கடுகு, எள், நெல்.