38
என
இளங்குமரனார் தமிழ் வளம் – 13
எழுவகை ஆசிரிய மதமாவன:
“உடன்படல், மறுத்தல்,
பிறர்தம் மதமேற் கொண்டு †களைதல், தாஅன் நாட்டித் தனாது *நிறுத்தல், இருவர் மாறுகோள் ஒருதலை துணிதல், பிறர் நூற் குற்றம் காட்டல், ஏனைப் பிறிதொடு படாஅன் தன்மதம் *கொளலே
வை.
இவ்வகையே புகுந்தன; புகுந்தன பரப்பி உரைப்பான் புகில், இகந்துபட்ட உரையிற்றாம்; எடுத்துக்கொள்ளப்பட்ட பொருளவற்றுள் யாதானும் ஒரு வகையாற் கேட்போர் உணர்வு புலன் கொள்ளுமாற்றால் எடுத்துக் கொண்ட சூத்திரப் பொருள் உரைக்க வேண்டும் என்பது ஈண்டுத் துணிபு. அஃது ஆமாறு:
‘வெறிகமழ்... யாப்பே' என்பது, ‘நறுநாற்றம் கமழும் தாமரைப் பூவின்மேல் நடந்த அறிவனை இறைஞ்சிச் சொல்லுவன் யாப்பு' என்றவாறு.
'இப்பொருளைச் சொல்லுமோ இச்சூத்திரத் தொடர் மொழி?' என்னில் சொல்லும். என்னை? 'வெறி' என்பது, 'நறுநாற்றம்' என்றவாறு: 'கமழ்' என்பது, 'நாறுதல்' என்ற வாறு; அது, ‘வெறிகமழ், சந்தனம்”. “வெறி கமழ் துழாய்' என்றாற் போலக் கொள்க. 'தாமரை' என்றது, ‘தாமரைப்பூ’ என்றவாறு;
து
266
"முதலிற்கூறும் சினையறி கிளவி.
66
தொல். வேற். மயங். 31 'தாமரை புரையும் காமர் சேவடி' குறுந்தொகை. கடவுள் வாழ்த்து.
وو
என்றாற்போலக் கொள்க. மீமிசை' என்பது, 'மேன்மேல்' என்றவாறு. "மீமிசை” என்பது, ஒரு பொருட்பன்மொழி சிறப்புப்பற்றி வந்தது. என்னை?
•
“ஒருபொருட் பன்மொழி சிறப்பினின் வழாஅ”
என்றாராகலின், அஃது,
66
'அடுக்கன் மீமிசை அருப்பம் பேணாது"
- நன்னூல். 398
மலைபடுகடாம். 19
என்றாற்போலக் கொள்க. ‘ஒதுங்கல்' என்பது, நடத்தல். அது,
1.
2.
இகந்துப்பட்ட – வரையறை கடந்த.
(பா. வே) முறையின் வைப்பே உலகமலை யாமை. †களைவே நிறுப்பே. வகுத்தல். முதலாகு பெயர்.