உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 13.pdf/569

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96.

சித்திரக்கவி மாலை

மாலை மாற்றே, சக்கரம், சுழிகுளம், ஏக பாதம், எழுகூற் றிருக்கை, காதை கரப்பே, கரந்துறை பாட்டே, தூசம் கொளலே, வாவ னாற்றி, கூட *சதுர்த்தம், கோமூத் திரியே, *ஓரெழுத் தினத்தால் உயர்ந்த பாட்டே, பாத மயக்கே, பாவின் புணர்ப்பே, ஒற்றுப் பெயர்த்தல், ஒருபொருட் பாட்டே, சித்திரப் பாவே, விசித்திரப் பாவே, விகற்ப நடையே வினாவுத் தரமே, சருப்பதோ பத்திரம், சார்ந்த எழுத்து வருத்தனம் மற்றும் வடநூற் கடலுள் ஒருக்குடன் வைத்த உதாரணம் நோக்கி விரித்து முடித்த மிறைக்கவிப் பாட்டே; உருவக மாதி விரவியல் ஈறா

வருமலங் காரமும் வாழ்த்தும் வசையும் கவியே கமகன் வாதி வாக்கியென்

றவர்கள் தன்மையும் அவையின தமைதியும்

பாடுதல் மரபும் தாரணைப் பகுதியும் ஆனந்தம் முதலிய ஊனமும் செய்யுளும்

விளம்பனத் தியற்கையும் நரம்பின் விகற்பமும் பண்ணும் திறமும் பாலையும் கூடமும் எண்ணிய திணையும் இருதுவும் காலமும் எண்வகை மணமும் எழுத்தும் சொல்லும் செந்துறை மார்க்கமும் வெண்டுறை மார்க்கமும் தந்திர உத்தியும் தருக்கமும் நடமும்

முந்துநூல் முடிந்த முறைமையின் வழாஅமை

(பா. வே) *சதுக்கம். *ஓரினத் தெழுத்தால். *சித்திரக் காவே விசித்திரக் காவே.