6
யாப்பருங்கலம்
இருபுற வாழ்த்து வருமாறு:
(நேரிசை வெண்பா)
"பண்டும் ஒருகாற்றன் பைந்தொடியைக் கோட்பட்டு
வெங்கடம் வில்லேற்றிக் கொண்டுழந்தான் - தென்களந்தைப் பூமான் திருமகளுக் கின்னம் புலம்புமால்
வாமான்றோர் வையையார் கோ'
ஃது இருபுற வாழ்த்து.
579
வசையும் இரண்டு வகைப்படும்: மெய் வசையும் இரு புற
வசையும் என.
66
வரலாறு:
(நேரிசை வெண்பா)
“தந்தை இலைச்சுமடன் தாய்தொழீஇ தான்பார்ப்பான்
எந்தைக்கீ தெங்ஙனம் பட்டதுகொல் - முந்தை
அவியுணவி னார்தெரியின் யாவதாங் கொல்லோ கவிகண்ண னார்தம் பிறப்பு!”
து மெய் வசை.
(நேரிசை வெண்பா)
“படையொடு போகாது நின்றெறிந்தான் என்றுங் கொடையொடு நல்லார்கட் டாழ்ந்தான் - படையொடு பாடி வழங்கும் தெருவெல்லாம் தான்சென்று
கோடி வழங்கு மகன்
இ ரு
இஃது இரு புற வசை.
66
‘கவியே கமகன் வாதி வாக்கியென்
றவர்கள் தன்மையும்
என்பது, ‘கவியும், கமகனும், வாதியும், வாக்கியும் என்ற இந்நால் வரது தன்மையும்,' என்றவாறு.
அவருட் கவி என்பார் நான்கு வகைப்படுவர்: ஆசு கவியும்; மதுர கவியும், சித்திர கவியும், வித்தார கவியும் என.
அவரைக் கடுங்கவி, இன்கவி, அருங்கவி, பெருங்கவி என்று வேண்டுவாரும் உளர்.
1
ஆசுகவியாவான், கொடுத்த பொருளும், தொடுத்த சூழலும், அடுத்த தொடையும் வழுவாமற் கடுத்துப் பாடுவான்.
1. எழுத்துச் சொற்பொருள் அணியாப் பிவையின், விழுத்தக ஒருவன் விளம்பிய உள்ளுறை, அப்பொழு துரைப்பது ஆசு கவியே. - இலக். விள. பாட்.4.