உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் ‘கா.சு.' கலைக்களஞ்சியம்

33

ல்வாழ்க்கைத் துணையாய மனைவி ன்ன நற்குணங்கள் உடையவளாய் இருத்தல் வேண்டும் என்பது குறிக்கப்படுகிறது” என்பது கூர்ந்து அறியத் தக்கதாம். 'இல்வாழ்வான்', இல் வாழ்க்கை அதிகாரத்தில் வருபவற்றைக் கருதின் கா. சு. உரைநயம் புலப்படும்.

சொல்லாலும், பொருளாலும் இனியவாகும் சொற்களைச் சொல்லுதல் 'இனியவை கூறல்' எனவும்(10);

முன் நினைப்பு இல்லாம்ல் வருவித்துக் கொண்ட நோயைத் தீர்க்கும் ‘மருந்து’ எனவும் (95);

அழகு துன்புறுத்தல் ‘தகையணங்குறுத்தல்' எனவும் (109); நற்செயலுக்காகப் பிறர் உதவியை நாடல் ‘இரவு’ எனவும் (106);

இயற்கையாய் மனிதர்க்கு உளதாகிய பகுத்தறிவுடை மையே இங்கு (அறிவுடைமை என) எடுத்துக்கொள்ளப் பட்டது எனவும் (43); அறுவகை மனக் குற்றங்களையும் நீக்குதல் (குற்றங் கடிதல்) எனவும் (44) கூறுவன அவ்வதிகாரப் பிழிவாகிச் சிறக்கின்றன.

ஒப்புரவறிதல் என்பதை விரிய நோக்கித் தெரிய வரைகிறார்.

‘ஒப்புரவு என்பது தம்மைச் சார்ந்த பிறரைத் தம்மோடொத்த நன்னிலை அடையும்படி செய்தல். அவருடைய குறைகளை உணர்ந்து அவற்றை நீக்குவதற்கு வழியறிதல் ஒப்புரவு எனப் படும். தம்முடைய குலத்தினருக்கும் நாட்டினர்க்கும் இடர் வந்த போது உதவுதல் ஒப்புரவு என்ப" என முப்பகுப்பில் வரைந்துளார். சில விலக்குகள்

னி

இனி இகல் என்பதற்கு ‘மாறுபடுதல் (சினத்தல்)' என்று சுருக்கம் உரைக்கிறார் (86).

நட்பு என்பதற்கு 'சிநேகம் இன்னதென்பது' என வட சொல்லை ஆள்கிறார். அவ்வதிகார உரையில் நேயம் ஓரிடத்தும், சிநேகம் மூன்றிடத்தும், நட்பு பத்திடத்தும் ஆளப்பெற்றுள. எண்ணியிருந்தால் சிநேக ஆட்சியை விலக்கியிருப்பர்.என்னெனின், பிரமசரியம், வானப் பிரத்தம், சந்நியாசம் என வடநூலார் கூறுவனவற்றைக் கல்விநிலை, மனைத்தவநிலை, துறவுநிலை எனத் தமிழாக்கம் செய்பவர் அவர்

(41).