உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 14.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

>இளங்குமரனார் தமிழ் வளம் – 14

66

னி அவையறிதல் என்பதற்குக் கழகத்தில் உள்ளவர் களின் நிலையை அறிந்து பேசுதல் என்றும், அவையஞ்சாமை என்பதற்குப் பேசுதற்குரிய கழகத்தைத் தெரிந்து பேசத் தொடங்கிய பிறகு அதற்கு நடுங்காமை என்றும் (72-13) விளக்கம் தருகிறார். ஆயின் வள்ளுவர் காலத்தில் கழகத்தின் பொருள் சூதாடுமிடமாகக் கொள்ளப் பெற்றதைக் 'கா.சு.’ நன்கு அறிவார். கவறும் கழகமும் என்பதற்குச் சூதாடும் கவற்றினையும் அஃதாடும் இடத்தையும்” எனவும் (935) கழகத்துக் காலை புகின் என்பதற்குச் "சூதாடு களத்தில் இளமையிலேயே புகுவராயின் அல்லது சூதாடு களத்திலே ஒருவனுக்குக் காலம் போமாயின் எனவும் (937) உரை வரைபவர் அவர். அறிஞர் அவையம் எனக் கழகத்திற்குப் பொருள் வரவு - கம்பர், பரஞ்சோதியார் முதலியோர் காலத்தின் ஆட்சிப் பட்டது. அதனை ஆள்தல் சைவசித்தாந்தக் கழகம், திருவிடர் கழகம், திராவிடர் கழகம் எனப் பெருவழக்கூன்றி விட்ட கால முத்திரைச் சான்றாம், உரையுள்ளும் கழகம், அவைக்களம், அறிஞர் கூட்டம் என்ப வற்றுடன் சபையையும் ஓரிடத்து ஆள்கிறார்

(730).

இனி 'கற்றிலனாயினும் கேட்க” (414), "நோக்கினாள் னி நோக்கி' (1093) என்பவற்றுக்குத் தெளிந்த வேறுரை காண வாய்ப்பிருந்தும் பரிமேலழகர் வழியில் எளிமைப்படுத்தும் அளவிலேயே கா.சு. அமைகிறார். "என்றென்று இரங்குவ செய்யற்க” (655) என்னும் குறளுரையும் அவ்வகையிலேயே அமைகின்றது.

நிறைவு

கா. சு. 1928 இல் ல் எழுதியது தெளிவுரை. அவ்வுரை பரிமேலழகர் உரையைத் தழுவி எளிமைப்படுத்துதல் நோக்கிலும், மிக அரிதாகவே புத்துரை, புது விளக்கம் தருதலிலும் எழுதப் பட்டது என்பது தெளிவுறுகின்றது. பின்னர் அவர் இயற்றிய நூல்களில் காணக் கிடக்கும் சீர்திருத்தக் கருத்துகள், திருக்குறள் தெளிவுரை கண்ட காலத்தில் அழுந்தவில்லை; அழுத்தி யுரைக்கப் பெறவும் இல்லை எனலாம். ஒருவர் தம் நூல் வரிசை ஆய்வும், அவர்தம் வரலாற்று ஆய்வுக்குச் சிறந்த இடமாய் அமையும் என ஒரு கருதுகோள் வகுத்துக் கொள்ள இஃது இடமாம்.