12
இளங்குமரனார் தமிழ்வளம்
―
15
அங்கணக் குழியில் இருந்து நீர் செல்வதற்குக் 'கண்' அல்லது துளை அமைக்கப்படுவது தெளிவான செய்தி. அக் கண் வெளியே புலப்பட அமைந்ததா? குழியினுள் மறைவாய் அமைந்ததா எனின், அதன் அகத்தே மறைவாக அமைக்கப் பட்டதேயாம். அகத்தே உள்ளே; அகம் என்பது 'அம், எனத் ெ தொகுத்து வருதல் பெருவழக்கு. அகம்+கை=அங்கை; அகம்+ செவி== அஞ்செவி.
இவற்றின் இலக்கணத்தை,
“அகமுனர்ச் செவிகை வரின் இடையனகெடும்”
என்கிறது நன்னூல்.
அகம் என்னும் சொல்லின் முன் செவி என்னும் சொல்லோ கை என்னுஞ் சொல்லோ வருமாயின். அகம் என்பதில் உள்ள க' என்னும் எழுத்து மறைந்துவிடும்; ‘அம்' என நின்று செவியோடு அம்+செவி=அஞ்செவி என்றும், அம்+கை=அங்கை என்றும் சேரும் என்பது இந்நூற்பாவின் விளக்கம். (அங்கை, வழக்கில் உள்ளங்கை என வழங்குதலும் அறிக)
இவ்விதியொடு சேரத்தக்க ஒரு சொல் ‘கண்’ என்பது அகம்+கண்=அங்கண். உள்ளிடத்தே அமைந்த கண் அகங்கண் அங்கண்), என்னும் ஒட்டினைச் சேர்த்து அகங்கண் அம் (அங்கணம்) ஆயிற்று என்க.
உள்ளிடத்தே கண்ணைக் கொண்ட குழி எனப் பிற
வற்றையும் ஒட்டிக்கொள்க.
இதனை வேறு வகையாகப் பிரித்துக் காட்டுவார்.
66
"அங்கு+அணம்=அங்கணம்
வங்கு>அங்கு. அங்குதல்
=
சாய்தல். வளைதல்.
கழிவு நீர் செல்லும் சாய்க்கடை வாட்டம் சாய்வாய் ருப்பதால் அங்கணம் எனப்பட்டது” என்பர்.
அகம் கண் அம் என்னும் இருசொல் ஒட்டு ஒரு சொல் தன்மைப்பட்டு நிற்பதே அங்கணம். இப்படிப் பல சொற்கள் ஒரு சொல்லாய் நிற்குமோ என அறிந்தோர் ஐயுறார்; 'அரிவாள் மணை' முச்சொற் கூட்டு ஒரு சொல். ஒட்டு இல்லாத முழுமுழுச் சொற்கள் அவை. அரிதல் சிறிதாய் (அறுத்தல்); அரிதற்கு வாள்; அவ்வாள் அமைதற்குரிய மணை (பலகை); இம்மூன்று உறுப்புகளும் உண்மை காண்க.