28
இளங்குமரனார் தமிழ்வளம்
―
15
அம்மவோ, அம்மாடியோ
அன்னை - அன்னா, அன்னாய், அன்னே, அன்னோ,
அன்னையே, அன்னையோ, அன்னன்னா, அன்னன்னே,
அன்னன்னோ
-
ஆத்தாள் ஆத்தா, ஆத்தே, ஆத்தோ, ஆத்தாடி,
ஆத்தாடியே, ஆத்தாடியோ, ஆத்தா ஆத்தா,
ஆத்தத்தா, ஆத்தத்தே, ஆத்தத்தோ, ஆத்தாவோ அப்பன் - அப்ப, அப்பா, அப்பே, அப்போ, அப்பப்ப,
அப்பப்பா, அப்பப்பே, அப்பப்போ, அப்பாடியோ அச்சன் - அச்சா, அச்சோ, அச்சச்சா, அச்சச்சோ
அச்சாவோ
அத்தன் - அத்தா, அத்தோ, அத்தத்தா, அத்தத்தோ,
அத்தாவோ
ஐயன் - ஐய, ஐயா, ஐயே, ஐயோ, ஐயகோ, ஐயவோ, ஐயாவோ
ஐயோ ஐயோ, ஐயையா, ஐயையே, ஐயையோ, ஐயாடியோ
அக்கை - அக்கா, அக்கோ, அக்கக்கா, அக்கக்கோ,
அக்கைச்சி,
அக்கடா, அக்கடே, அக்காடி, அக்கடோ,
அண்ணன் - அண்ண, அண்ணா, அண்ணே, அண்ணோ,
அண்ணாவோ, அண்ணாத்தே, அண்ணால்
இன்னவை பிறவுமாம். இச்சொற்கள் எல்லாமும் உயிர் முதல் எழுத்தால் இயன்றவை என்பது நோக்கத்தக்கது. இச் சொற்களைப் போலவே உணர்வு வெளிப்பாட்டுச் சொல்லாக ருப்பது ‘அந்தோ' என்பது. ஆயின் அஃதொரு முறைப் பெயராக வழக்கில் இல்லை. ஆனால், அது முறைப்பெயர் வழிப்பட்டதாகவே இருக்க வேண்டும் என உறுதி செய்யலாம். அம்முறைப்பெயர் ‘அ ந் தை' என்பதாம். அந்தை என்னும்