67.
புறத்திரட்டு
ஆன்ற சான்றோர்க் கணுகாது முதுமை
யாண்டுபல வாக நரையில் வாகுதல் யாங்கா கியரென வினவு திராயின்
மாண்டவென் மனைவியொடு மக்களு நிரம்பினர் யான்கண் டனையரென் னிளையரும் வேந்தனும் அல்லவை செய்யான் காக்கு மதன்றலை ஆன்றவிந் தடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழு மூரே.
85
-புறநானூறு 191
7. கற்புடை மகளிர்
(“கற்பாவது மன உறுதியே'
-திருக். 54. நாகை. சொ. தண்ட.
“கற்பெனப் படுவது சொற்றிறம் பாமை” அஃதுடைய மகளிர்,
கற்புடை மகளிராம்.
1. தாளுங்.
பெ.அ: நாலடி. 39.
இ. .சா.அ: ப.பா.தி.11. (கற்பு))
வற்றா வளமை நற்றிற மனையாள்
68. சொல்லாமை நோக்கிக் குறிப்பறியும் பண்பிற்றம் இல்லாளே வந்த விருந்தோம்பிச் - செல்வத் திடரின்றி யேமார்ந் திருந்தாரே 'யென்றுங் கடலுட் டுலாம்பண்ணி னார்.
-பழமொழி 330
பேணுந்தகைமை பெற்றவள் பெண்ணே
2
69. கட்கினியாள் காதலன் காதல் வகைபுனைவாள் உட்குடையா ளூர்நா ணியல்பினாள் - உட்கி இடனறிந் தூடி யினிதி னுணரு
மடமொழி மாதராள் பெண்.
2. ளூரா.