130.
புறத்திரட்டு
காப்பதில் தலைமை நாக்கல தில்லை
ஆக்கப் படுக்கு மருந்தளைவாய்ப் பெய்விக்கும் போக்கப் படுக்கும் புலைநரகத் துய்விக்கும் காக்கப் படுவன விந்திரிய 'மைந்தினும் நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே.
15. ஒழுக்கமுடைமை
101
-வளையாபதி 18
(“உலகம் ஒப்பிய நெறியில் தவறாமை” - நாகை. சொ. தண்ட. இ.பெ.அ: திருக். 14. நீதிக். 2. இ.சா.அ: பழமொழி 5 ப.பா.தி.19 (ஒழுக்கம்))
131.
கட்டமை ஒழுக்கம் எட்டெனக் காண்க
நன்றி யறிதல் பொறையுடைமை யின்சொல்லோ
டின்னாத வெவ்வுயிர்க்குஞ் செய்யாமை கல்வியோ டொப்புர வாற்ற வறித லருளுடைமை நல்லினத் தாரோடு நட்ட லிவையெட்டும் சொல்லிய வாசார வித்து.
பிறப்பு முதலாம் பெருநலம் எட்டு
132. பிறப்பு நெடுவாழ்க்கை செல்வம் வனப்பு நிலக்கிழமை மீக்கூற்றங் கல்விநோ யின்மை இலக்கணத்தா லிவ்வெட்டு மெய்துப வென்றும் ஒழுக்கம் பிழையா தவர்.
தந்தைதாய்த் தொழுதெழல் முந்தையோர் காண்முறை
133.
1. மைந்தினுள்.
வைகறை யாமந் துயிலெழுந்து 'தாஞ்செய்யும் நல்லறமு மொண்பொருளுஞ் சிந்தித்து வாய்வதிற் றந்தையுந் தாயுந் தொழுதெழுக வென்பதே முந்தையோர் கண்ட நெறி.
2. லறிவுடைமை.
3. தான்செய்யும்.