114
188.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
தாழ்ந்த குடியிலும் தக்கோர் பிறக்கலாம்
கள்ளி வயிற்றின் அகில்பிறக்கும் மான்வயிற்றின் ஒள்ளரி தாரம் பிறக்கும் பெருங்கடலுட் பல்விலைய முத்தம் பிறக்கும் அறிவார்யார் நல்லாள் பிறக்குங் குடி.
- நான்மணிக்கடிகை 4
அறிந்தோர் எல்லாம் அறிந்தோர் அல்லர் 189. 'பலகற்றேம் யாமென்று தற்புகழ வேண்டா அலர்கதிர் ஞாயிற்றைக் கைக்குடையுங் கீகாக்கும் சிலகற்றார் கண்ணு 3முளவாம் பலகற்றார்க் கச்சாணி யன்னதோர் சொல்.
-அறநெறிச்சாரம் 79
நாவிற் கழிவு நயனிலாச் சொல்லே
190. சிலம்பிக்குத் தன்சினை கூற்றநீள் கோடு விலங்கிற்குக் கூற்ற மயிர்தான் - வலம்படா மாவிற்குக் கூற்றமாம் ஞெண்டிற்குத் தன்பார்ப்பு நாவிற்கு நன்றல் வசை.
22. தீவினை யச்சம்
-சிறுபஞ்சமூலம் 11
(“தீய செய்தற்கு அஞ்சுவது” – நாகை சொ. தண்ட.
இ. பெ.அ: திருக். 21. நாலடி. 13. நீதிக். 8)
காணார் எனச் செயேல் மாணா வினைகள்
191. எனக்குத் தகவன்றா லென்பதே நோக்கித் தனக்குக் கரியாவான் றானாய்த் தவற்றை நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனுங் காணா ரெனச் செய்யார் மாணா வினை.
1. பலகற்றோம்.
2. (ந்) தாங்கும்.
3. முளவே.
-பழமொழி 102