118
இளங்குமரனார் தமிழ் வளம் 17
(“அறநெறியான்
23. தானம்
வந்த
பொருள்களைத் தக்கார்க்கு
உவகையோடும் கொடுத்தல்” - பரிமே. திருக்.19)
ஈகை வகையின் இயல்பு கூறுதல்
206. அச்சமே யாயுங்கால் நன்மை யறத்தொடு கச்சமில் கைம்மா 'றருளைந்தால் - மெச்சிய தோகை மயிலன்ன சாயலாய் தூற்றுங்கால் ஈகை வகையி னியல்பு.
ஈந்தால் ஐந்தை எய்தும் கோடி
207. கைம்மாறு மச்சமுங் காணிற் பயமின்மை பொய்ம்மாறு நன்மை சிறுபய - மெய்ம்மா றருள்கூடி யாரறத்தொ டைந்தியைந் தீயிற் பொருள்கோடி பெய்தல் புகன்று.
இசைநோக் கீகை கூலிக் குழைப்பு
-சிறுபஞ்சமூலம்
208. பயனோக்கா தாற்றவும் பாத்தறிவொன் றின்றி இசைநோக்கி யீகின்றா ரீகை - வயமாப்போல் ஆலித்துப் பாயு மலைகடற் றண்சேர்ப்ப
கூலிக்குச் செய்துண்ணு மாறு.
நாடொறும் ஈந்தால் கோடென ஓங்கும்
-பழமொழி 383
209. இறப்பச் சிறிதென்னா தில்லென்னா தென்றும் அறப்பயன் யார்மாட்டுஞ் செய்க - முறைப்புதவின் ஐயம் புகூஉந் தவசி கடிஞைபோற் பைய நிறைத்து விடும்.
1. றெனவைந்தால். 206, 207, இச்செய்யுட்கள் சிறுபஞ்சமூலப் பதிப்புக்களிற் காணப் பெறவில்லை.
2. க்குற்றுண்ணு.