130
இளங்குமரனார் தமிழ் வளம் 17
அருள்பொருள் ஆயின் இருளியல் பின்றே
257. பொருளைப் பொருளாப் பொதிந்தோம்பல் செல்லா தருளைப் பொருளா வறஞ்செய்தல் வேண்டும் அருளைப் பொருளா வறஞ்செய்து வான்கண் இருளிலியல் பெய்தாத தென்னோ நமரங்காள்.
28. புலால் மறுத்தல்
-வளையாபதி 19, 20
(“ஊன் உண்டலை ஒழிதல்” - பரிமே.
இ.பெ.அ: திருக். 26. ப.பா.தி. 33.)
கொல்லா இல்லறம் நல்லியற் றவமாம்
258. கென்றூ னுகருங் கொடுமையை புண்ணினைந் தன்றே யொழிய விடுவானேல் - என்றும்
இடுக்க ணெனவுண்டோ இல்வாழ்க்கை யுள்ளே 'படுத்தானாந் தன்னைத் தவம்.
அறநெறிச்சாரம் 101
ஊனுண வுவப்பார்க் கேனைய வுதவா
259. விடலரிய துப்புடைய வேட்கையை நீக்கிப் படர்வரிய நன்னெறிக்க ணின்றார் - இடருடைத்தாப் பெற்ற விடக்கு நுகர்தல் கடனீந்திக்
கற்றடியு ளாழ்ந்து விடல்.
ஊனுணாச் சார்பே உம்பருள் உய்க்கும்
பழமொழி 342
260. கரப்பவர்க்குச் செல்சார் கவிழ்தலெஞ் ஞான்றும் இரப்பவர்க்குச் செல்சார்வொன் றீவோர் - பரப்பமைந்த தானைக்குச் செல்சார் தறுகண்மை யூனுண்டல் செய்யாமை செல்சார் வுயிர்க்கு.
-நான்மணிக்கடிகை 38
1. மடுத்தானாந்.