புறத்திரட்டு
தேனைப் பதங்க முருவங்கண்
டிடுக்க ணெய்து மிவையெல்லாம் கான மயிலின் சாயலார்
காட்டிக் கௌவை 'விளைத்தாலும் மான மாந்த ரெவன்கொலோ
வரையா தவரை வைப்பதே.
139
-சாந்தி புராணம்
உண்ணின் றுருக்கும் கண்ணிலாக் காமம்
293. எண்ணின்றி யேதுணியு மெவ்வழி யானு மோடும் உண்ணின் றுருக்கு முரவோருரை கோட லின்றாம் நண்ணின்றி யேயு நயவாரை நயந்து நிற்குங் கண்ணின்று காம நனிகாமுறு வாரை வீழ்க்கும்.
காம மிக்குழிக் கருதார் நல்லவை
294. சான்றோ ருவர்ப்பத் தனிநின்று பழிப்ப காணார் ஆன்றாங் கமைந்த குரவர்மொழி கோட லீயார் வான்றாங்கி நின்ற புகழ்மாசு படுப்பர் காமன் தான்றாங்கி விட்ட கணைமெய்ப்படு மாயி னக்கால்.
பெருங்கா முற்றார் பேயெனத் திரிவார்
295. மாவென் றுரைத்து மடலேறுப மன்று தோறும் பூவென் றெருக்கி னிணர்சூடுப் புன்மை 3கொண்டே பேயென் றெழுந்து பிறரார்ப்பவு 'நிற்ப காம
நோய்நன் கெழுந்து நனிகாழ்க் கொள்வ தாயி னக்கால். ஒருநிலை கொள்ளார் பெருநிலைக் காமுகர்
296. நக்கே விலாவி றுவர்நாணுவர் நாணும் வேண்டார் புக்கே கிடப்பர் கனவுந்நினை கையு மேற்பர் துற்றூண் மறப்ப ரழுவர்நனி துஞ்ச லில்லார் நற்றோள் மிகைபெ ரிதுநாடறி துன்ப மாக்கும்.
1. விளைத்தலான்.
2. படுப்பக்.
3. G600L.
4. நிற்பர்.