புறத்திரட்டு
விலங்குறு கடுந்துயர் விலங்குதல் விரும்பிற் புலன்கொள்வழி பொய்யுரை புறத்திடுமி னென்றான்.
145
-சீவகசிந்தாமணி
34. வெகுளாமை
(“சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன்மாட்டு. உளதாய இடத்தும் அதனைச் செய்யாமை” - பரிமே.
இ.பெ.அ: திருக். 31. பழமொழி. 7.
இ.சா.அ: நாலடி. 7. (சினமின்மை) ப.பா.தி. 27 (சினம்)) முட்டிய பசுவை முட்டுவார் உளரோ?
316.
ஆய்ந்த வறிவின ரல்லாதார் புல்லுரைக்குக்
காய்ந்தெதிர் 'சொல்லுபவோ கற்றறிந்தார் - தீந்தேன் முசுக்குத்தி நக்கு மலைநாட தம்மைப்
பசுக்குத்திற் குத்துவா ரில்.
ஈமிதித் தேறக் காய்வார் எவரே?
317. மதித்திறப் பாரு மிறக்க மதியா மிதித்திறப் பாரு மிறக்க - மிதித்தேறி ஈயுந் தலைமே லிருத்தலா லஃதறிவார் காயுங் கதமின்மை நன்று.
கௌவிய நாயைக் கௌவினார் யாரே?
பழமொழி 57
318. கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டுந் தம்வாயாற் பேர்த்துநாய் கௌவினா ரீங்கில்லை - நீர்த்தன்றிக் கீழ்மக்கள் கீழாய சொல்லியக்காற் சொல்பவோ மேன்மக்கள் தம்வாயான் மீட்டு.
1. சொல்லுவரோ.