156
இளங்குமரனார் தமிழ் வளம் 17
38. இளமை நிலையாமை
66
துறத்தல்
இளமை என்பது குழந்தைப் பருவம். இப் பருவத்தின் நிலையாமை ம கூறியது இந்தப் பருவத்திலே பயனுண்டென்பது தோன்று” தற்காம் - தருமர்.
இ.பெ.அ: நாலடி. 2.)
358.
இளமையில் துறந்தார் இயல்பை அறிந்தார்
நரைவரு மென்றெண்ணி நல்லறி வாளர் குழவி யிடத்தே துறந்தார் - 'புரைதீர்ந்த மன்னா விளமை மகிழ்ந்தாரே கோலூன்றி இன்னாங் கெழுந்திருப் பார்.
மன்னா மகிழ்ச்சி துன்னார் அறிவர்
359. வெறியார் வெங்களத்து வேல்மகன் பாணி முறியார் தறுங்கண்ணி முன்னர்த் தயங்க மறிகுள குண்டன்ன மன்னா மகிழ்ச்சி அறிவுடை யாளர்க ணில்.
அம்மனைக் கோலளாம், அழகியாய் அணங்கினோள்
360. தாழாத் தளராத் தலைநடுங்காத் தண்டூன்றா வீழா விறக்கு மிவள்மாட்டுங் - காழிலா
மம்மர்கொள் மாந்தர்க் கணங்காகுந் தன்கைக்கோல் அம்மனைக்கோ லாகிய ஞான்று.
-நாலடியார் 11, 16, 14
தொடக்க இன்பமும் முடிவுத் துன்பமும்
361. கடிமாலை சூடிக் கருப்பூர முக்கித்
தொடைமாலை ’மென்முலையார் தோள்தோய்ந்த மைந்தர்
கடைமாலை மற்றவரே 3கண் புதைப்பச் செல்லும்
நடைமாலைத் திவ்வுலகம் நன்றரோ நெஞ்சே.
1. புரைதீரா.
2. வெம்முலையார்.
3. கண்புகைப்பச்.