புறத்திரட்டு
பலவாய்ப் பகரினும் அறநெறி ஒன்றே 435. ஆவே றுருவின வாயினு மாபயந்த பால்வே ருருவின வல்லவாம் - பால்போல் ஒருதன்மைத் தாகு மறநெறி யாபோல் உருவு பலகொள லீங்கு.
பிறப்பின் வித்தாய்ப் பேசிடும் மூன்று
—
177
-நாலடியார் 118
436. பற்றென்னும் பாசத் தளையும் பலவழியும் பற்றறா தோடு மவாத்தேருந் தெற்றெனப் பொய்த்துரை யென்னும் 'புகையிருளு மிம்மூன்றும் வித்தற வீழும் பிறப்பு.
2
மேனின் றமைந்த மேதையர் மூவர்
437. முந்நீர்த் திரையி னெழுந்தியங்கா மேதையும் நுண்ணூற் பெருங்கேள்வி நூற்கரை கண்டானும் மைந்நீர்மை "யின்றி மயலறுப்பா னிம்மூவர் மெய்ந்நீர்மை மேனின் றவர்.
-திரிகடுகம் 22, 35
வெருவரு துன்பம் விடுக்குந் திறலோன்
438. பருவந்து சாலப் பலர்கொலென் றெண்ணி ஒருவந்த முள்ளத் 'துவத்த லொழிமின் வெருவந்த துன்பம் விடுக்குந் திறலோன் ஒருவ னுலகிற் குளனென்னு மாறே.
439.
அரிதும் எளிதும் பெரியோர் கருதார்
பெரிய வின்பத் திந்திரனும்
பெட்ட செய்கைச் சிறுகுரங்கும்
-வளையாபதி 45
1. பகையிருளு.
2. வீடும்.
3. шIGOTMl.
4. துழல்.