208
இளங்குமரனார் தமிழ் வளம் 17
வெறுமின் வினைதீயார் கேண்மையெஞ் ஞான்றும் பெறுமீன் பெரியார்வாய்ச் சொல்.
பண்பட் டோரிடம் பயின்று கேட்க
-நாலடியார் 172
562. அந்தணர் சான்றோ ரருந்தவத்தோர் தம்முன்னோர் தந்தைதா யென்றிவர்க்குத் தார்வேந்தே - முந்தை வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி மொழிநின்று கேட்டல் முறை.
ஏழ்கடிந் திட்டால் எய்தும் இன்பம்
563. ஒன்றி லிரண்டாய்ந்து மூன்றடக்கி நான்கினால் வென்று களங்கொண்ட வேல்வேந்தே - சென்றுலாம் ஆழ்கடல்சூழ் வையகத் தைந்துவென் 'றாறகற்றி ஏழ்கடிந் தின்புற் றிரு.
கரவா தீதல் கடமையாக் கொள்க
564. முல்லைக்குத் தேரு மயிலுக்குப் போர்வையும் எல்லைநீர் ஞாலத் திசைவிளங்கத் - தொல்லை இரவாம லீந்த இறைவர்போல் நீயும்
கரவாம லீகை கடன்.
-புறப்பொருள் வெண்பாமாலை 221, 225, 194
நின்னை அறிவோன் நீயே ஆவாய்
565. தந்நடை நோக்கார் தமர்வந்த வாறறியார்
செந்நடை சேராச் சிறியார்போ லாகாது
நின்னடை யானே நடவத்தா நின்னடை நின்னின் றறிகிற்பா ரில்.
தெளிந்த அறங்கள் தேர்ந்து புகன்றது
566. உறுவர்ப் பேண லுவர்ப்பின்மை
1. றாறடக்கி.
யுலையா வின்பந் தலைநிற்றல்
-பழமொழி 36