240
இளங்குமரனார் தமிழ் வளம் 17
66. கண்ணோட்டம்
("தன் உறவினரும் நண்பரும் தன்னொடு பழகியவரும் தன்னொடு தொடர்புடையவரும் தனக்கு உதவினவரும் எளிய வரும் ஆனவர்க்கு நன்மை செய்வதை மறுக்க முடியாத அன்பு’
பாவாணர்.
இ.பெ.அ: திருக். 58. நீதிக். 51.)
அழிபகை ஆயினும் அருள்வர் பெரியர்
685. தெற்றப் பகைவ ரிடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற நவைக்கப் படுந்தன்மைத் தாயினுஞ் சான்றோர் அவைப்படிற் சாவாது பாம்பு.
உருத்து வெகுளார் உயர்பெரு மக்கள்
686. 'எல்லை யெனவின்றி இன்னாசெய் தாரையும் ஒல்லை வெகுளா ருலகாண்டு மென்பவர்
சொல்லின் வளாஅய்த்தந் தாணிழற்கீழ்க் கொள்பவே கொல்லையிற் கூழ்மரமே போன்று.
-பழமொழி 86. 256
அருளே கண்ணுக் கணிகலம் ஆகும்
687. கண்ணுக் கணிகலங் கண்ணோட்டங் காமுற்ற பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங் குறியுடையார் கண்ணே யுள.
கண்ணென லாமோ கண்ணோ டாததை?
-திரிகடுகம் 52
688. ஒன்று நரம்பென்கோ வொன்றாத வென்பென்கோ இன்றசை தானென்கோ யாதென்கோ - மென்றொடையாழ்
1. எல்லையொன் றின்றியே.
2. இன்னாத செய்தாரை.