உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 17.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240

இளங்குமரனார் தமிழ் வளம் 17

66. கண்ணோட்டம்

("தன் உறவினரும் நண்பரும் தன்னொடு பழகியவரும் தன்னொடு தொடர்புடையவரும் தனக்கு உதவினவரும் எளிய வரும் ஆனவர்க்கு நன்மை செய்வதை மறுக்க முடியாத அன்பு’

பாவாணர்.

இ.பெ.அ: திருக். 58. நீதிக். 51.)

அழிபகை ஆயினும் அருள்வர் பெரியர்

685. தெற்றப் பகைவ ரிடர்ப்பாடு கண்டக்கால் மற்றுங்கண் ணோடுவர் மேன்மக்கள் - தெற்ற நவைக்கப் படுந்தன்மைத் தாயினுஞ் சான்றோர் அவைப்படிற் சாவாது பாம்பு.

உருத்து வெகுளார் உயர்பெரு மக்கள்

686. 'எல்லை யெனவின்றி இன்னாசெய் தாரையும் ஒல்லை வெகுளா ருலகாண்டு மென்பவர்

சொல்லின் வளாஅய்த்தந் தாணிழற்கீழ்க் கொள்பவே கொல்லையிற் கூழ்மரமே போன்று.

-பழமொழி 86. 256

அருளே கண்ணுக் கணிகலம் ஆகும்

687. கண்ணுக் கணிகலங் கண்ணோட்டங் காமுற்ற பெண்ணுக் கணிகலம் நாணுடைமை - நண்ணும் மறுமைக் கணிகலங் கல்வியிம் மூன்றுங் குறியுடையார் கண்ணே யுள.

கண்ணென லாமோ கண்ணோ டாததை?

-திரிகடுகம் 52

688. ஒன்று நரம்பென்கோ வொன்றாத வென்பென்கோ இன்றசை தானென்கோ யாதென்கோ - மென்றொடையாழ்

1. எல்லையொன் றின்றியே.

2. இன்னாத செய்தாரை.