246
L
இளங்குமரனார் தமிழ் வளம் 17
இசையா தெனினும் அசையா தாற்றுக 708. இசையா தெனினு மியற்றியோ ராற்றான் அசையாது நிற்பதா மாண்மை - இசையுங்காற் கண்டல் திரையலைக்குங் கானலந் தண்சேர்ப்ப பெண்டிரும் வாழாரோ மற்று.
-நாலடியார் 192, 193, 195, 191, 194.
முன்னிய வெல்லாம் முடிப்பது முயற்சி
709. கண்டதே 'செய்பவாங் கம்மிய ருண்டெனக் கேட்டதே செய்ப புலனாள்வார் - வேட்ட இனியவே செய்ப வமைந்தார் முனியாதார் முன்னிய செய்யுந்திரு.
-நான்மணிக்கடிகை 39
உள்ளம் உடைமையே வெள்ள நிதியம்
710. உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே வெள்ளநிதி வீழும்விளை யாததனி னில்லைத் தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பின் எள்ளுநர்கட் கேக்கழுத்தம் போலவினி தன்றே.
70. இடுக்கணழியாமை
-சீவகசிந்தாமணி 496
“யாதானும் ஒரு துன்பம் வந்துற்ற காலத்து அதற்கு அழியாமை'
- மணக். (அழியாமை - மனங்கலங்காமை)
இ.பெ.அ: திருக். 63. நீதிக். 42.
அஞ்சிச் சோர்தல் ஆள்வினை அன்று
711. நனியஞ்சத் தக்கவை வந்தக்கால் தங்கண் துனியஞ்சார் செய்வ துணர்வார் - பனியஞ்சி வேழம் பிடிதழூஉம் வேய்சூழ் மலைநாட ஊழம்பு வீழா நிலத்து.
99
1. செய்வராங்.
2. செய்வர்.
-பழமொழி 240