751.
புறத்திரட்டு
வேற்றுமை யார்க்குமுண் டாதலா னாற்றுவான்
நூற்றுவரைக் கொன்று விடும்.
257
பழமொழி 17, 261, 19, 18, 307
செவ்வி யறிந்து செப்புக திறமாய்
விரைந்துரையார் மேன்மே லுரையார்பொய் யாய பரந்துரையார் பாரித் துரையார் - 'ஒருங்கெனைத்துஞ் சில்லெழுத்தி னானே பொருளடங்கக் காலத்தாற் சொல்லுக செவ்வி யறிந்து.
-ஆசாரக்கோவை 76
சொல்லின் வனப்பே சொல்லரும் வனப்பு
752. மயிர்வனப்புங் கேண்கவரு மார்பின் வனப்பும் உகிர்வனப்புங் காதின் வனப்புஞ் - செயிர்தீர்ந்த பல்லீன் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த சொல்லின் வனப்பே வனப்பு.
-சிறுபஞ்சமூலம் 37
எளியவை நான்கும் அரியவை நான்கும்
3
753. சாவ தெளிதரிது சான்றாண்மை நல்லது மேவ லெளிதரிது மெய்போற்றல் - ஆவதன்கண் சேற லெளிது நிலையரிது தெள்ளியரா
வேற லெளிதரிது சொல்.
கற்றுத் தேர்ந்தவர் சொற்றிற மாண்பு
-ஏலாதி 39
754. நுண்மொழி நோக்கிப் பொருள்கொளலும் நூற்கேலா வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை - நன்மொழியைச் சிற்றின மல்லார்கட் சொல்லலு மிம்மூன்றும் கற்றறிந்தார் பூண்ட கடன்.
1. ஒருங்கனைத்துஞ்
திரிகடுகம் 32
2. கண்வவ்வு.
3. மெய்யோர்தல்.