260
இளங்குமரனார் தமிழ் வளம் 17
இன்னா தவற்றுள் இன்னா கொடுங்கோல் 764. சிறையில் கரும்பினைக் காத்தோம்ப லின்னா 'உறைசேர் பழங்கூரை சேர்ந்தொழுக லின்னா முறையின்றி யாளு மரசின்னா வின்னா
மறையின்றிச் செய்யும் வினை.
இன்னா நாற்பது 6
சூழ்வாரைச் சூழல் வாழ்வார் வழக்கு
765. சூதினா னாகத்தன் றோள்வலியாற் றானாக யாதினா னாயினும்வந் தெய்துமேல் - தீதெண்ணிச் சூழ்வாரைத் தாமுன்னஞ் சூழ்வதே மன்னராய் வாழ்வாருக் குள்ள வழக்கு.
வலியவர் தொடர்பு வலிமையில் வலிமை 766. நலிவில் குன்றொடு காடுறை நன்பொருட் புலிய னார்மகட் கோடலும் பூமிமேல் வலியின் மிக்கவர் தம்மகட் கோடலும் நிலைகொள் மன்னர் வழக்கென நேர்பவே.
-பாரதம்
74. தூது
சீவகசிந்தாமணி 1919
(“மாற்றரசர் மாட்டுச் சந்து செய்யும் அமாத்தியர் இலக்கணம் கூறுதல்” - மணக் (அமாத்தியர் - அமைச்சர். இவண் தூதர்)
இ
1. புரைசேர்.
பெ.அ: திருக். 69)
ஆற்றல் பலவும் அமைந்தவர் தூதர்
767. மாண்டமைந்தா ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை யாண்டமைந்த கல்வியே சொல்லாற்றால் - பூண்டமைந்த கால மறிதல் கருதுங்காற் றூதுவர்க்கு
ஞால மறிந்த புகழ்.
-ஏலாதி 26