புறத்திரட்டு
இ.பெ.அ: திருக். 71. நீதிக். 23.
271
இ.சா.அ: பழமொழி. 16. (பிறரியல்பைக் குறிப்பாலறிதல்))
809.
கள்ள முடையரைக் கண்டே யறியலாம்
வெள்ளம் வருங்காலை யீர்ப்படுக்கு மஃதேபோற்
கள்ள முடையாரைக் கண்டே யறியலாம் ஒள்ளமர்க் கண்ணா யொளிப்பினு முள்ளம் 'பரந்ததே கூறு முகம்.
பார்த்தே அறியலாம் பளிங்குபோல் உள்ளம்
810. நோக்கி யறிகல்லாத் தம்முறுப்புக் கண்ணாடி நோக்கி யறிப வதுவேபோல் - நோக்கி முகனறிவார் முன்ன மறிப வதுவே வ மகனறிவு தந்தை யறிவு.
பானை சோற்றுக்குப் பதமோர் அவிழே
811. பேருலையுட் பெய்த வரிசியை வெந்தமை 2யோரவிழி னாலே யுணர்ந்தாங்கு - யார்கண்ணுங் கண்டதனாற் காண்டலே வேண்டுமாம் யாதற்குங் கண்டது காரணமா 3மாறு
மனத்துள தறிதல் மாண்பினர் சீர்மை
812. நினைத்த திதுவென்றந் நீர்மையை நோக்கி மனத்த தறிந்தீவர் மாண்டார் - புனத்த குடிஞை "யிரட்டுங் குளிர்வரை நாட
கடிஞையுட் கல்லிடுவா ரில்.
-பழமொழி, 144, 145, 142, 375
அகம்பொதி யுணர்வை முகமிகக் காட்டும்
813. நாற்ற முரைக்கு மலருண்மை கூறிய
மாற்ற முரைக்கும் வினைநலந் தூக்கின்
1. படர்ந்ததே.
2. ஓர்முறையி
3. LOÝMI.
1. யரற்றுங்.