புறத்திரட்டு
அரணைந் தமைநாட் டரசே வேந்து
847. நீண்டநீர் காடு களர்நிவந்து விண்டோயு மாண்ட மலைமக்க ளுள்ளிட்டு - மாண்டவர் ஆய்ந்தன வைந்து மரணா வுடையானை வேந்தென நாட்டல் விதி.
281
-சிறுபஞ்சமூலம் 49
காவலிற் களவு வலிதெனக் காண்க
848. அமையா விடத்தோ ரரும்பொருள் வைத்தால் இமையாது காப்பினு மாகா - இமையாரும் அக்காலத் தோம்பி யமிழ்துகோட் பட்டமையின் நற்காப்பிற் றீச்சிறையே நன்று.
பழமொழி 207
நகராம் நங்கையின் நல்லுரு வகங்காண் 849. அகழ்கிடங் கந்துகி லாய்பொற் பாம்புரி புதழ்தரு மேகலை ஞாயில் பூண்முலை திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகஞ் சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்பவே.
கொடியாம் கையாற் கூவி அழைத்தல்
850. இஞ்சி மாக நெஞ்சு போழ்ந் தெல்லை காண வேகலின் மஞ்சு சூழ்ந்து கொண்ட ணிந்து மாக நீண்ட நாகமும் அஞ்சு நின்னை யென்றலி னாண்டு நின்று நீண்டதன் குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி விட்ட தொத்ததே.
-சீவகசிந்தாமணி 1444, 148
பற்றி நெருங்கிற் பழிவாங்கு பொறிகள்
851. மாற்றவர் மறப்படை மலைந்துமதில் பற்றின்
நூற்றுவரைக் கொல்லியொடு நூக்கியெறி பொறியும் தோற்றமுறு பேய்களிறு துற்றுபெரும் பாம்புங்
கூற்றமன கழுகுதொடர் குந்தமொடு கோண்மா.