294
903.
இளங்குமரனார் தமிழ் வளம் 17
மெய்ம்மை தவறார் மேதகு சான்றோர்
மொய்கொண் டெழுந்த வமரகத்து மாற்றார்வாய்ப் பொய்கொண் டறைபோய்த் திரிபவர்க் 'கென்கொலாம் மையுண் டமர்த்தகண் மாணிழாய் சான்றவர் கையுண்டுங் கூறுவர் மெய்.
இல்லாத் திறத்தை இயம்புங் கீழ்கள்
904. உருத்தெழு ஞாட்பினு ளொன்னார் தொலையச் செருக்கினாற் செய்கலார் செய்வாரே போலத் தருக்கினாற் றம்மிறைவன் கூழுண் பவரே
கருத்தினாற் கூறைகொள் வார்.
ஊன்றாத் துணையில் ஒருதனி நன்று
905. கொடையு மொழுக்கமுங் கோளுள் ளுணர்வும் உடைய ரெனப்பட் டொழுகிப் பகைவர்
3.
உடையமேற் செல்கிற்கு மூற்ற மிலாதார் படையிற் படைத்தனிமை நன்று.
பழமொழி 249, 83, 321, 325
முன்னோர் பெயரால் தன்வயி றருத்துவோர்
906. அமர்விலங்கி யாற்ற வறியவும் பட்டார்
எமர்மேலை யின்னரால் யார்க்குரைத்து மென்று தமர்மறையாக் கூழுண்டு சேற லதுவே மகன்மறையாத் தாய்வாழு மாறு.
வாய்ப்புக் கருதியே வழங்குதல் இயற்கை
907. தன்னின் வலியானைத் தானுடைய ‘னல்லாக்கால் என்ன குறைய னிளையரான் மன்னும் புலியிற் பெருந்திறல வாயினும் பூசை
எலியில் வழிப்பெறா பால்.
-பழமொழி 322, 324
1. கென்கொலோ.
2. உருத்தகு.
3. மிலாத.
4. னல்லாதான்.