புறத்திரட்டு
ஊதிய மாவது உயர்குடிப் பிறப்பே
1085. நல்லவை செய்யி னியல்பாகுந் தீயவை பல்லவர் தூற்றும் பழியாகும் - எல்லாம் உணருங் குடிப்பிறப்பி னூதிய மென்னோ புணரு மொருவற் கெனின்.
குடிப்பிறப் பாளர் குன்றார் வறுமையில்
1086. ஒருபுடை பாம்பு கொளினு மொருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூஉந் - திங்கள்போற் செல்லாமை செவ்வனேர் நிற்பினு மொப்புரவிற் கொல்கார் குடிப்பிறந் தார்.
இற்பிறந் தாருக் கிருக்கும் பண்புகள்
1087. இனநன்மை யின்சொலொன் றீதல்மற் றேனை மனநன்மை யென்றிவை யெல்லாங் - கனமணி முத்தோ டிமைக்கு முழங்குவரித் தண்சேர்ப்ப இற்பிறந்தார் கண்ணே யுள.
335
-நாலடியார் 143, 144, 148, 146
சிதைந்த வுரையார் முதிர்ந்த மேலோர்
1088. கடித்துக் கரும்பினைக் கண்டகர நூறி இடித்துநீர் கொள்ளினு மின்சுவைத்தே யாகும். வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் - குடிப்பிறந்தார் 'கூறார்தம் வாயிற் சிதைந்து.
மாணாக் குடிக்கு மண்டும் அச்சம்
1089. கல்லாமை யச்சங் கயவர் தொழிலச்சம் சொல்லாமை யுள்ளுமோ சோர்வச்சம் - எல்லாம் இரப்பார்ககொன் றீயாமை யச்ச மரத்தாரிம்
[ மாணாக் குடிப்பிறந் தார்.
1. சொல்லார்தம்.
-நாலடியார் 156, 145