புறத்திரட்டு
இயல்பிலார் பின்சென் றேதும் உரையேல் 1094. என்பா யுகினு மியல்பில்லார் பின்சென்று தம்பா டுரைப்பரோ தம்முடையார் - தம்பா 'டுரையாமை முன்னுணரு மொண்மை யுடையார்க் 2குரையாரோ தாமுற்ற நோய்.
பழிவழிப் படாத பசிநலம் பெரிதே
1095. இழித்தக்க செய்தொருவ னார வுணலிற் பழித்தக்க செய்யான் பசித்தல் தவறோ விழித்திமைக்கு மாத்திரை யன்றோ வொருவற் கழித்துப் பிறக்கும் பிறப்பு.
ப
மான மழுங்கிட வானமும் வேண்டா
1096. கடமா தொலைச்சிய கானுறை வேங்கை இடம்வீழ்ந்த துண்ணா திறக்கும் - இடனுடைய வானகங் கையுறினும் வேண்டார் விழுமியோர் மான 3மழுங்க வரின்.
வருவன வனைத்தும் வந்தே தீரும்
1097. தம்மை யிகழ்வாரைத் தாமவரின் முன்னிகழ்க என்னை யவரொடு பட்டது - புன்னை விறற்பூங் கமழ்கானல் வீங்குநீர்ச் சேர்ப்ப உறற்பால யார்க்கு முறும்.
337
-[5/TOULQ_UIIT 298, 292, 302, 300, 117
உள்ளங் குறைபட உரவோர் வாழார்
1098. பறைபட வாழா வசுணமா வுள்ளங்
குறைபட வாழா ருரவோர் - நிறைவனத்து நெற்பட்ட கண்ணே வெதிர்சாந் 'தனக்கொவ்வாச் சொற்பட்டாற் சாவதாஞ் சால்பு.
-நான்மணிக்கடிகை 2
1. டுரையாமன்.
2. குரையாரே.
3. மழிய.
4. தமக்கொல்லாச்.