புறத்திரட்டு
செங்கண் சிவக்கக் கரிபரந் தெழுந்தது
1278. கரிபரந் தெங்கங் கடுமுள்ளி பம்பி
நரிபரந்து நாற்றிசையுங் கூடி - எரிபரந்த
பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு.
ஊரை அறியா உலைவு பட்டது
1279. வேரறுகை பம்பிச் சுரைபடர்ந்து வேலைபூத் தூரறிய லாகா கிடந்தனவே - போரின் முகையவிழ்தார்க் கோதை முசிறியார் கோமான் நகையிலைவேல் காய்த்தினார் நாடு.
ஊமன் பாட உறங்கும் குழவி
1280. இரியல் மகளி ரிலைஞெமலு ளீன்ற வரியிளஞ் செங்காற் குழவி - அரையிரவின் ஊமன்பா ராட்ட புறங்கிற்றே செம்பியன்றன் நாமம்பா ராட்டாதார் நாடு.
1281.
கூகை பாடக் கூத்திடும் பேய்கள்
―
வாகை வனமாலை சூடி யரசுறையும் ஓகை 'யுயர்மாடத் துள்ளிருந்து கூகை படுபேய்க்குப் பாட்டயரும் பண்பிற்றே தென்னன் விடுமாற்றங் கொள்ளாதார் நாடு.
எவரும் போக இருந்தது பேயே!
1282. 'பறைநிறை கொல்யானைப் பஞ்சவர்க்குப் பாங்காய்த் திறைமுறையி னுய்யாதார் தேயம் - முறைமுறையின் ஆன்போ யரிவையர்போ யாடவர்போ 3யாயின்றே ஈன்பே யுறையு மிடம்.
381
-முத்தொள்ளாயிரம் 8, 9, 10, 11, 12
1. யுறைமாடத்.
2. பறைநின்ற.
3. யாயீன்ற ஈன்போ.