408
இளங்குமரனார் தமிழ் வளம் 17
தானையை விலக்கி யானைமேல் எறிவோன் 1373. கட்டி யன்ன காரி மேலோன்
தொட்டது கழலே கையது வேலே சுட்டி யதுவுங் களிறே யொட்டிய தானை முழுதுடன் விடுத்துநம் யானை காமினவன் பிறிதெறி யலனே.
அஞ்சு தக்கனள் அஞ்சா மகன்றாய் 1374. அஞ்சுதக் கனளே யஞ்சுதக் கனளே பயறு காவலர் பந்த ரன்ன
அலறுதலை முதியாள் அஞ்சதக் கனளே வெஞ்சமத், தென்செய் கென்னும் வேந்தர்க் கஞ்ச லென்பதோர் களிறீன் றனளே.
புகழ்சால் மன்னிர்! இகழ்தல் ஓம்புமின்
1375. வல்லோன் செய்த வகையமை வனப்பிற் கொல்வினை முடியக் குருதிக் கூரிலை வெல்வேல் கைவல னேந்திக் கொள்ளெனிற் கொள்ளுங் காலு மாவேண் டானே
மேலோன், அறிவொடு புணர்ந்த நெறியிற் புரவிக்
கழற்கா லிளையோ னழற்றிகழ் வெகுளி
இகழ்த லோம்புமின் புகழ்சால் மன்னிர்
தொல்லை ஞான்றைச் செருவினு ளிவன்கை வேல்வாய் வீழ்ந்தோர் பெண்டிர் கைம்மையின்
அறுத்த கூந்தற் பிறக்கஞ் சகடம்
பொறுத்தல் செல்லா பலமுரிந் தனவே, அதனால்
வல்லோர் பூழை நின்மின் கல்லென
வெஞ்சமங் குரைப்பக் கூர்தலின்
அஞ்சுதக வுடைத்திவ் வாற்றலோ னிலையே.
வரையேறு புலிபோல் வருவதோர் காளை
1376. உண்டது, கள்ளு மன்று களிப்பட் டனனே ஊர்ந்தது, புள்ளு மன்று பறந்தியங் கும்மே