410
இளங்குமரனார் தமிழ் வளம்
மூழ்குவ ளொன்றோ வன்றே லென்யாய் மூழ்குவ ளொன்றோ வன்றியவன்
றாயும் யாயு முடன்மூழ் குபவே.
123. குதிரை மறம்
17
-தகடூர்யாத்திரை
(போர்க் கலையில் தேர்ச்சி மிக்க குதிரையின் வீரத்தை
மிகுத்துக் கூறியது.
மேற்: தொல். பொருள். 72. பு.வெ.மா. 133.)
தானை மறவீர் தாங்கன் மின்மா
1379. தாங்கன்மின் தாங்கன்மின் தானை விறல்மறவிர் ஓங்கல் மதிலு ளொருதனிமா - ஞாங்கர் மயிரணியப் பொங்கி மழைபோன்று மாற்றார் உயிருணிய வோடி வரும்.
கணையின் முந்திக் களம்வரும் குதிரை
1380. குந்தங் கொடுவிற் குருதிவேல் கூடாதார் வந்த வகையறியா வாளமருள் - வெந்திறல் ஆர்கழல் மன்ன னலங்குளைமா வெஞ்சிலை வார்கணையின் முந்தி வரும்.
-புறப்பொருள் வெண்பாமாலை, 90, 133
குதிரைக் குளம்பு பொன்னால் ஆயதோ?
1381. நிரைகதிர்வேல் மாறனை நேர்நின்றார் யானைப் புரைசை யறநிமிர்ந்து பொங்கா - அரசர்தம் முன்முன்னா 'வீழ்ந்தார் முடிக ளுதைத்தமாப் பொன்னுரைகற் போன்ற குளம்பு.
-முத்தொள்ளாயிரம் 18