422
இளங்குமரனார் தமிழ் வளம் 17 கண்ணார் கமழ்தெரியற் 'காவிரி நீர்நாடன் எண்ணாரை யட்ட களத்து.
-களவழி நாற்பது 14, 4, 15, 24
ஐவாய்ப் பாம்பு கவ்விய பருந்து
1423. எவ்வாயு மோடி வயவர் துணித்திட்ட
கைவாயிற் கொண்டெழுந்த செஞ்செவிப் புன்சேவல் ஐவாய் 2விடநாகங் கவ்வி விசும்பிவருஞ் செவ்வா யுவணத்திற் றோன்றும் புனனாடன் தெவ்வரை யட்ட களத்து.
உருமிற் குடையும் அரியும் வரையும்
1424. செவ்வரைச் சென்னி யரிமானோ டவ்வரை ஒல்கி யுருமிற் குடைந்தன்றால் - மல்கிக் கரைகொன் றிழிதருங் காவிரி நாடன் உரைசா லுடம்பிடி முழ்க வரசோ
டரசுவா வீழ்ந்த களத்து.
மாவுதை குடைகள் ஆவுதை காளான்
1425. ஓஓ உவமை யுறழ்வின்றி யொத்ததே காவிரி நாடன் கழுமலங் கொண்டநாள்
3
மாவுதைப்ப மாற்றார் குடையெலாங் கீழ்மேலாய் ஆவுதை காளாம்பி போன்ற புனனாடன் மேவாரை யட்ட களத்து.
மதியம் நக்கும் பாம்பை ஒக்கும்!
1426. இருநிலஞ் சேர்ந்த குடைக்கீழ் வரிநுதல் ஆடியல் யானைத் தடக்கை யொளிறுவாள் ஓடா மறவர் துணிப்பத் துணிந்தவை கோடுகொ 'ளொண்மதிய நக்குபாம் பொக்குமே பாடா ரிடிமுரசிற் பாய்புன னீர்நாடன் கூடாரை யட்ட களத்து.
1. பாரிற் றன்னாடன்.
2. வயநாகம்.
3. ஆவுதைக்கு மாம்பி நிகர்த்த.