புறத்திரட்டு
செங்குளம் வடிந்து செல்லுங் காட்சி
1427. ஞாட்பினு ளெஞ்சிய ஞாலஞ்சேர் யானைக்கீழ்ப் போர்ப்பி லிடிமுரசி னூடுபோ மொண்குருதி
கார்ப்பெயல் பெய்தபிற் செங்குளக் கோட்டுக்கீழ் நீர்த்தூம்பு நீருமிழ்வ போன்ற புனனாடன்
ஆர்த்தம ரட்ட களத்து.
423
-களவழி நாற்பது, 26, 35, 36, 22,
2
குடைமறை இகலன், குளிர்மதி முயலாம்
1428. படைப்பொலிதார் மன்னர் பரூஉக்குடர் மாந்திக் குடைப்புறத்துத் துஞ்சு மிகலன் - இடைப்பொலிந்த திங்களிற் றோன்று முயல்போலுஞ் செம்பியன் செங்கண் சிவந்த களத்து.
மூங்கில் எரியும் முளிபுதர்க் காடு
-களவழி நாற்பது
1429. கைபொருத வோசையாற் கண்ணுமிழ்ந்த செந்தீயான் மெய்பொருது தோய்ந்தெழுந்த வெம்புகையான் - ஐயோ வெதிர்வேங் கடுங்கானம் போன்றதே வெம்போர் எதிர்வேந்தர் செய்த விடம்.
பரிசு கண்டு குரவை ஆடுதல்
1430. வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை - நின்றளிப்ப உண்டாடு பேய்கண் டுவந்தனவே போர்ப்பரிசில் கொண்டா டினகுரவைக் கூத்து.
-பாரதம்
1.ளொண்மதியை.
2. பெய்தலிற்.
1428 இப் பாடல் களவழிநாற்பதில் இடம்பெற்றிலது.
-பெரும்பொருள் விளக்கம்