புறத்திரட்டு
127. இரங்கல்
425
(மண்ணவர் மயங்க விண்ணுலகு சென்றவன் பண்பினைப் புகழ்ந்து நொந்து வருந்தியது. கையறுநிலை என்பதும் இது.
மேற். தொல்.பொருள். 79. பு.வெ.மா. 31; 80; 267; 274.) அறத்தின் வாயிலை அடைத்தது வேலே
1436. போர்க்குப் புணைமன் புரையோர்க்குத் தாணுமன் ஊர்க்கு முலகிற்கு மோருயிர்மன் - யார்க்கு மறந்திறந்த வாயி லடைத்ததே யண்ணல் நிறந்திறந்த நீணிலைய வேல்.
அழுதார் ஆற்றில் ஆடுங் கூகை
1437. முன்புறந் தான்காணு மிவ்வுலக மிவ்வுலகிற் றன்புறங் கண்டறிவார் தாமில்லை - அன்பின் அழுதார்க ணீர்விடுத்த வாறாடிக் கூகை
3
கழுதார்ந் திரவழங்குங் காடு.
-புறப்பொருள் வெண்பாமாலை 80, 274
தோற்கண் ஆதலால் துடிகள் அழுதில
1438. இரவலர் வம்மி னெனவிசைத்த லின்றிப் புரவலன் மாய்ந்துழியும் பொங்கும் - உரையழுங்க. வேற்கண் ணியரழுத வெம்பூசல் கேட்டடங்கா தோற்கண்ண போலுந் துடி.
-தகடூர் யாத்திரை
உலகெலாம் ஒடுக்கும் ஒருபெருங் காடு
1439. உலகு பொதியுருவந் தன்னுருவ மாகப் பலர்பரவத் தக்க பறந்தலை நன்காடு புலவுங்கொ லென்போல் புலவுக் களத்தோ டிலைநெடுவே லோனை யிழந்து.
1. தொக்குமே.
2 நீளிலை.
1439. இப்பாடல் எந்நூலைச் சேர்ந்ததென அறியக்கூடவில்லை. 3. வாறோடிக்.