4.
5.
6.
புறத்திரட்டு
வாழும் பொழுதே வானெய்த வழிகள் தாழ்ந்த உணர்வினராய்த் தாளுடைந்து
தண்டூன்றித் தளர்வார் தாமும்
சூழ்ந்த வினையாக்கை சுடவிளிந்து நாற்கதிக்கட் சுழல்வார் தாமும்.
மூழ்ந்த பிணிநலிய முன்செய்த
வினையென்று முனிவார் தாமும்
வாழ்ந்த பொழுதினே வானெய்து
நெறிமுன்னி முயலா தாரே.
453
-யாப். வி. 94; யா.கா. ஒழி. 7; நன். 415, மயிலை. 2. (12) செய்ந்நன்றியறிதல்
ஒருவரூ னுண்டார் பிறர்க்குரித் தாகார்
ம
முன்னொருவன் செய்யு முபகாரம் மூவுலகுந் தன்னைக் கொடுத்தாலுஞ் சாலுமே - யென்னே உயிர்க்குறுதி யாக வொருவர்சோ றுண்டார் பிறர்க்குரிய ராவரோ பேசு.
-(பாரதவெண்பா) பெருந்தொகை - 290
3. (14) அடக்கமுடைமை
கடுஞ்சொல் அரவங் கடிக்கும் நல்லரை
கல்லார் வாயிற் கடுஞ்சொல்லாங் காரரவு
நல்லாரைச் சென்று நனிகடிக்குஞ் - சொல்லாவோர் மந்திரமு மில்லை மகிதலத்தே மற்றுமொரு
தந்திரமு மில்லையதன் சால்பு.
-வீரசோ. அலங். 23. மேற்.
() இக்குறியிலுள்ள எண் புறத்திரட்டிலுள்ள அதிகாரத்தைக் குறிப்பது.