11.
12.
13.
14.
புறத்திரட்டு
உவர்க்கடல் தன்னினும் ஊற்றே உயர்வு
உவர்க்கட லன்ன செல்வரு முளரே
கிணற்றூற் றன்ன நீயுமா ருளையே
செல்வர்தாம் பெருந்திரு வுறுக பல்பகல்
நீவா ழியரோ நெடிதே யீயாச்
சிறுவிலைக் காலத் தானு
முறுபொரு டந்தெஞ் சொற்கள் வோயே.
455
-நன்னூல் 268 மயிலை. மேற்.
5. (26) புகழ்
ஈதல் இசைபடல் ஊதிய மாகும்
எய்தற் கரிய வியன்றக்கா லந்நிலையே செய்தற் கரிய செயலென்று - வையகத் தீத லிசைபட வாழ்த லதுவல்ல தூதிய மில்லை யுயிர்க்கு.
-
- யாப்.வி. 60. மேற்.
பொருளைப் பொழிவார் மேலே புகழாம்
வெய்ய குரற்றோன்றி வெஞ்சினவே றுட்கொளினும் பெய்யு மழைமுகிலைப் பேணுவரால் - வையத் திருள்பொழியுங் குற்றம் பலவெனினும் யார்க்கும் பொருள் பொழிவார் மேற்றே புகழ்.
வீரசோ. அலங். 20 மேற்.
கல்லார் நாவிற் கட்டுரை கொள்ளேல்
கல்லார் நாவிற் கட்டுரை கொள்வார் - புகழெய்தார் புல்லார் வாயிற் சொற்றெளி வுற்றார் - புகழெய்தார் நல்லார் மேவு நண்பு துறந்தார் - புகழெய்தார் இல்லா ராய்நின் றின்ப முவந்தார் – புகழெய்தார்.
-வீரசோ. யாப். 15 மேற்.