456
15.
16.
17.
1. பின்னோர்த்தல்.
இளங்குமரனார் தமிழ் வளம் 17 6.(33) பொய்யாமை
பொய்யின் தன்மை பொருந்த உரைத்தது
அற்றன் றாத லதுதான் மனஞ்செய்தல் சொற்றன் மாட்டு நிகழ்தல்' பிறனோர்த்தல் மற்றித் தன்மை படுமாயின் மாண்பிலாக் குற்றப் பொய்யென் றுரைப்பர் குணமிக்கார்.
-நீலகேசி. 1. மேற். (குண்டலகேசி)
7. (37) செல்வ நிலையாமை
நில்லாத் தன்மையே நித்த நிலைமை கல்வியா னல்லனே காமாதி யாற்றீயன் செல்வத் துயர்ந்தான் குலத்தினிற் றாழ்ந்தானாம் வல்லுவா னொன்றொன்று வல்லானிதுவன்றோ நில்லாமை நித்த நிலை.
-நீலகேசி. மொக்கல. 113 மேற்.
சிலமுறை யல்லது செல்வ நில்லா
பலமுறையு மோம்பப் படுவன கேண்மின்
சொலன்முறைக்கட் டோன்றிச் சுடர்மணித்தே ரூர்ந்து
நிலமுறையி னாண்ட நிகரிலார் மாட்டுஞ்
சிலமுறை யல்லது செல்வங்க ணில்லா
விலங்கு மெறிபடையு மாற்றலு மாண்புங்
கலந்ததங் கல்வியுந் தோற்றமு மேனைப்
பொலஞ்செய் புனைகலனோ டிவ்வாற னாலும்
விலங்கிவருங் கூற்றை விலக்கலு மாகா அனைத்தாத னீயிருங் காண்டிர் நினைத்தகக்
கூறிய வெம்மொழி பிழையாது
தேறிநீ ரொழுகிற் சென்றுபயன் றருமே.